7-باب : الجلوس لا ستماع العلم
பாடம் 7

பாடம்: 7. கல்வியைச் செவியுறுவதற்காக அமர்தல்

ஹதீஸ் 313 அத்தியாயம் 8 பாடம் 7

(ق) عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ إِذْ أَقْبَلَ ثَلَاثَةُ نَفَرٍ فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا وَأَمَّا الْآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أُخْبِرُكُمْ عَنْ النَّفَرِ الثَّلَاثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ فَآوَاهُ اللَّهُ وَأَمَّا الْآخَرُ فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ وَأَمَّا الْآخَرُ فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ . 313

அபூவாக்கித் ( அல்ஹாரிஸ் பின் மாலிக் ) அல்லைஸீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களுடன் ( மஸ்ஜிதுந்நபவீ ) பள்ளிவாசலில் அமர்ந்து கொண்டிருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர் . அவர்களுள் இருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி வந்தனர் . மற்றொருவர் ( அலட்சியப்படுத்திவிட்டுச் ) சென்றுவிட்டார் . ( பள்ளிக்குள் வந்த ) அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வீற்றிருந்த அவை ) முன்னால் வந்து நின்றார்கள் . அவ்விருவருள் ஒருவர் வட்டமான அந்த அவையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்துகொண்டார் . மற்றவரோ அவையினருக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( தமது பேச்சை ) முடித்ததும் கூறினார்கள் : இம்மூன்று பேர்களைப் பற்றி உங்களுக்குச் சொல்லட்டுமா ? அவர்களுள் ஒருவர் அல்லாஹ்வின் ( அருளின் ) பக்கம் ஒதுங்கினார் . அல்லாஹ்வும் அவரை அரவணைத்துக் கொண்டான் . மற்றவரோ வெட்கப்பட்டு ( க்கொண்டு கடைசியில் உட்கார்ந்து ) விட்டார் . எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டுக்கொண்டான் . மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றுவிட்டார் . எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்திவிட்டான் .

Reference: ( புகாரீ : 66, முஸ்லிம் : 2176)