8-باب : التثبت من العلم
பாடம் 8

பாடம்: 8. கேட்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ளுதல்

ஹதீஸ் 314 அத்தியாயம் 8 பாடம் 8

(ق) عَنْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ لَا تَسْمَعُ شَيْئًا لَا تَعْرِفُهُ إِلَّا رَاجَعَتْ فِيهِ حَتَّى تَعْرِفَهُ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حُوسِبَ عُذِّبَ قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ أَوَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا قَالَتْ فَقَالَ إِنَّمَا ذَلِكِ الْعَرْضُ وَلَكِنْ مَنْ نُوقِشَ الْحِسَابَ يَهْلِكْ . 314

இப்னு அபீமுலைக்கா ( அப்தில்லாஹ் பின் உபைதில்லாஹ்-ரஹிமஹுல்லாஹ் ) கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தமக்குப் புரியாத ஒரு செய்தியைச் செவியுற்றால் அதனை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை ( அதையொட்டி ) மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் . ( ஒருமுறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , “ எவர் ( மறுமை நாளில் துருவித் துருவி ) விசாரிக்கப்படுவாரோ அவர் வேதனை செய்யப்படுவார் `` என்று கூறினார்கள் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “ அல்லாஹ் ( குர்ஆனில் ) " வலக்கரத்தில் தமது வினைச்சுவடி வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும் ` (84:8) என்றல்லவா கூறுகின்றான் ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இது ( கேள்வி கணக்குத் தொடர்பானது அன்று : மாறாக , மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியல் அவர்களுக்குமுன் ) சமர்ப்பிக்கப்படுவதுதான் . துருவித் துருவி விசாரிக்கப்படுபவர் அழிந்தே போய்விடுவார் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 103, முஸ்லிம் : 2876)
ஹதீஸ் 315 அத்தியாயம் 8 பாடம் 8

(خ) عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَسْجِدِ دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ فَأَنَاخَهُ فِي الْمَسْجِدِ ثُمَّ عَقَلَهُ ثُمَّ قَالَ لَهُمْ أَيُّكُمْ مُحَمَّدٌ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ فَقُلْنَا هَذَا الرَّجُلُ الْأَبْيَضُ الْمُتَّكِئُ فَقَالَ لَهُ الرَّجُلُ يَا ابْنَ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَجَبْتُكَ فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي الْمَسْأَلَةِ فَلَا تَجِدْ عَلَيَّ فِي نَفْسِكَ فَقَالَ سَلْ عَمَّا بَدَا لَكَ فَقَالَ أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ فَقَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الْخَمْسَ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ قَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنْ السَّنَةِ قَالَ اللَّهُمَّ نَعَمْ قَالَ أَنْشُدُكَ بِاللَّهِ آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ نَعَمْ فَقَالَ الرَّجُلُ آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ. 315

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் ( மஸ்ஜிதுந் நபவீ ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி ( யின் வளாகத்தி ) ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத ( ன் முன்னங்காலி ) னை மடக்கிக்கட்டினார் . பிறகு மக்களிடம் “ உங்களுள் முஹம்மது அவர்கள் யார் ?” என்று கேட்டார் . - அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள் .- “ இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம் ” என்று நாங்கள் சொன்னோம் . உடனே அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை “ அப்துல் முத்தலிபின் ( மகனின் ) புதல்வரே !” என்றழைத்தார் . அதற்கு நபியவர்கள் “ என்ன விஷயம் ?`` என்று கேட்டார்கள் . அப்போது அம்மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் “ நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன் . சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன் . அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது `` என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ உம் மனதில் பட்டதைக் கேளும் !`` என்றார்கள் . உடனே அம்மனிதர் “ உம்முடைய , உம் முன்னோருடைய இரட்சகன்மீது ஆணையாகக் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா ?” என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !`` என்றார்கள் . அடுத்து அவர் “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக ( நாளன்றுக்கு ) ஐவேளைத் தொழுகைகளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு ( ம் மக்களுக்கும் ) கட்டளையிட்டிருக்கின்றானா ?`` என்று கேட்டார் . அதற்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக `` என்றார்கள் . அவர் “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் ; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் ( குறிப்பிட்ட ) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !” என்றார்கள் . அவர் , “ அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன் : அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த ( ஸகாத் எனும் ) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆம் , அல்லாஹ் சாட்சியாக !` என்றார்கள் . ( இவற்றைக் கேட்டுவிட்டு ) அம்மனிதர் “ நீங்கள் ( இறைவனிடமிருந்து ) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன் `` என்று கூறிவிட்டு “ நான் , எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன் ; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா `` என்றும் கூறினார் .

Reference: ( புகாரீ : 63)