10-باب : الا قتصاد في الموعظة
பாடம் 10

பாடம்: 10. அறிவுரை வழங்குவதில் நடுநிலை பேணல்

ஹதீஸ் 320 அத்தியாயம் 8 பாடம் 10

(ق) عَنْ أَبِي وَائِلٍ قَالَ كَانَ عَبْدُ اللَّهِ يُذَكِّرُ النَّاسَ فِي كُلِّ خَمِيسٍ فَقَالَ لَهُ رَجُلٌ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ لَوَدِدْتُ أَنَّكَ ذَكَّرْتَنَا كُلَّ يَوْمٍ قَالَ أَمَا إِنَّهُ يَمْنَعُنِي مِنْ ذَلِكَ أَنِّي أَكْرَهُ أَنْ أُمِلَّكُمْ وَإِنِّي أَتَخَوَّلُكُمْ بِالْمَوْعِظَةِ كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَخَوَّلُنَا بِهَا مَخَافَةَ السَّآمَةِ عَلَيْنَا . 320

அபூவாயில் ஷகீக் பின் சலமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார்கள் . ( ஒரு நாள் ) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “ அபூ அப்திர் ரஹ்மான் ! தாங்கள் நாள்தோறும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என நான் பெரிதும் விரும்புகிறேன் ” என்றார் . அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு , “ உங்களைச் சலிப்படையச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைச் செய்யவிடாமல் என்னைத் தடுக்கிறது . நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன் . இவ்வாறுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள் `` என்றார்கள் .

Reference: ( புகாரீ : 70, முஸ்லிம் : 2821)
ஹதீஸ் 321 அத்தியாயம் 8 பாடம் 10

(خ) عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ حَدِّثْ النَّاسَ كُلَّ جُمُعَةٍ مَرَّةً فَإِنْ أَبَيْتَ فَمَرَّتَيْنِ فَإِنْ أَكْثَرْتَ فَثَلَاثَ مِرَارٍ وَلَا تُمِلَّ النَّاسَ هَذَا الْقُرْآنَ وَلَا أُلْفِيَنَّكَ تَأْتِي الْقَوْمَ وَهُمْ فِي حَدِيثٍ مِنْ حَدِيثِهِمْ فَتَقُصُّ عَلَيْهِمْ فَتَقْطَعُ عَلَيْهِمْ حَدِيثَهُمْ فَتُمِلُّهُمْ وَلَكِنْ أَنْصِتْ فَإِذَا أَمَرُوكَ فَحَدِّثْهُمْ وَهُمْ يَشْتَهُونَهُ فَانْظُرْ السَّجْعَ مِنْ الدُّعَاءِ فَاجْتَنِبْهُ فَإِنِّي عَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ يَعْنِي لَا يَفْعَلُونَ إِلَّا ذَلِكَ الِاجْتِنَابَ . 321

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : வாரத்தில் ஒரு முறை மக்களுக்கு உரை நிகழ்த்துங்கள் . ( அது போதாது எனக் கருதி ) அதற்கு நீங்கள் மறுத்தால் ( வாரத்தில் ) இரண்டு முறை உரை நிகழ்த்துங்கள் . அதைவிட அதிகமாகப்போனால் மூன்று முறை உரை நிகழ்த்துங்கள் . ( அதைவிட அதிகமாகப்போய் ) இந்தக் குர்ஆன் மீது மக்களுக்குச் சடைவை ஏற்படுத்திவிடாதீர்கள் . மக்கள் எதையோ பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் அவர்களிடம் சென்று உரையாற்ற , அதையடுத்து அவர்களின் பேச்சு தடைபட்டுவிட , அதனால் அவர்களை நீங்கள் சோர்வடையச் செய்கின்ற நிலையில் உங்களை நான் காணக் கூடாது . மாறாக , நீங்கள் ( அப்போது ) மௌனமாக இருங்கள் . அவர்களாக விரும்பி உங்களைக் கேட்டுக்கொண்டால் அவர்கள் மத்தியில் உரையாற்றுங்கள் . எதுகை மோனையுடன் பிரார்த்தனை செய்வதைக் கவனமாக இருந்து தவிர்த்து விடுங்கள் . ஏனெனில் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் இவ்வாறு செய்வதிலிருந்து தவிர்ந்திருக்கவே நான் கண்டுள்ளேன் .

Reference: ( புகாரீ : 6337)