பாடம்: 13. கல்வியைக் கைப்பற்றுதல்
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ لَا يَقْبِضُ الْعِلْمَ انْتِزَاعًا يَنْتَزِعُهُ مِنْ الْعِبَادِ وَلَكِنْ يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ فَضَلُّوا وَأَضَلُّوا . 325
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் கல்வியை ( த் தன் ) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து கைவசப்படுத்திக் கொள்ளமாட்டான் . ஆயினும் , அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான் . கடைசியாக எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காதபோதே மக்கள் அறிவீனர்களைத் ( தம் ) தலைவர்களாக்கிக் கொள்வார்கள் . அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட , அவர்கள் எந்த அறிவுமில்லாமல் மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள் . எனவே தாமும் வழி கெட்டுப் போவார்கள் ; பிறரையும் வழி கெடுப்பார்கள் .
عَنْ زِيَادِ بْنِ لَبِيدٍ قَالَ ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَقَالَ ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ وَالنَّصَارَى يَقْرَءُونَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا . 326
ஸியாத் பின் லபீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதோ ஒன்றைக் கூறினார்கள் . அப்போது அவர்கள் , “ அது ( குர்ஆனின் ) கல்வி அழிந்துவிடும்போது ( நடைபெறும் )” என்று கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதரே ! ( குர்ஆனின் ) கல்வி எப்படி அழிந்துபோகும் ? நாங்கள் குர்ஆனை ஓதுகிறோம் . எங்கள் பிள்ளைகளுக்கு அதை ஓதிக்கொடுக்கிறோம் . எங்கள் பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதை மறுமை நாள் வரை ஓதிக்கொடுப்பார்கள் . ( அப்படியிருக்கும்போது எப்படி அது அழிந்துபோகும் ?) என்று வினவினேன் . அதற்கவர்கள் , “ ஸியாத் ! உம் தாய் உம்மை இழக்கட்டுமாக ! நான் உம்மை மதீனாவில் உள்ள அறிவாளி என்றல்லவா நினைத்தேன் . இந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஓதத்தானே செய்கின்றார்கள் ? அவர்கள் அவ்விரண்டிலிருந்தும் எதையும் விளங்குவதில்லையே ? என்று மறுவினாத் தொடுத்தார்கள் .
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْرُسُ الْإِسْلَامُ كَمَا يَدْرُسُ وَشْيُ الثَّوْبِ حَتَّى لَا يُدْرَى مَا صِيَامٌ وَلَا صَلَاةٌ وَلَا نُسُكٌ وَلَا صَدَقَةٌ وَلَيُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ فِي لَيْلَةٍ فَلَا يَبْقَى فِي الْأَرْضِ مِنْهُ آيَةٌ وَتَبْقَى طَوَائِفُ مِنْ النَّاسِ الشَّيْخُ الْكَبِيرُ وَالْعَجُوزُ يَقُولُونَ أَدْرَكْنَا آبَاءَنَا عَلَى هَذِهِ الْكَلِمَةِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَنَحْنُ نَقُولُهَا. 327
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆடையின் ஓரம் தேய்வதைப் போன்று இஸ்லாம் தேய்வடையும் . இறுதியில் நோன்பு , தொழுகை , ( ஹஜ்ஜுக்கான ) கிரியைகள் , தர்மம் ஆகியவை என்னவென்றே தெரியாது . வல்லமையயும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதம் ஓரிரவில் உயர்த்தப்பட்டுவிடும் . ஆகவே அதிலிருந்து ஒரு வசனம் கூடப் புவியில் மிச்சமிருக்காது . மக்களுள் ஒரு குழுவினர் இருப்பார்கள் . அவர்களுள் முதியோர்களும் பாட்டிகளும் , லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் இந்தக் கலிமாவை எங்களின் மூதாதையர்கள் கூறுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம் . எனவே நாங்களும் அதைக் கூறுகிறோம் என்று சொல்வார்கள் . அப்போது ஸிலா என்பவர் ( இந்த ஹதீஸை அறிவித்த ஹுதைஃபா ) அவர்களிடம் , நோன்பு , தொழுகை , ( ஹஜ்ஜுக்கான ) கிரியைகள் , தர்மம் ஆகியவை என்னவென்றே தெரியாத அவர்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவைக் கூறுவதால் என்ன பயன் ? என்று வினவினார் . ( அதற்குப் பதிலளிக்காமல் ) அவரிடமிருந்து ஹுதைஃபா ( முகத்தைத் ) திருப்பிக்கொண்டார் . பின்னர் அவர் மும்முறை அதே வினாவை மீண்டும் மீண்டும் வினவினார் . ஒவ்வொரு தடவையும் ஹுதைஃபா அவரைவிட்டுத் திருப்பிக்கொண்டார் . பின்னர் மூன்றாம் தடவை , அவரை முன்னோக்கி , “ ஸிலா ! அது அவர்களை நரகத்திலிருந்து காப்பாற்றும் ” என்று மும்முறை விடையளித்தார் .