16- باب : كراهة سؤال أَهل الكتاب
பாடம் 16

பாடம்: 16. வேதக்காரர்களிடம் (மார்க்கம் தொடர்பாகக்) கேள்விகேட்பது வெறுக்கத்தக்கது

ஹதீஸ் 332 அத்தியாயம் 8 பாடம் 16

(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ أَهْلُ الْكِتَابِ يَقْرَءُونَ التَّوْرَاةَ بِالْعِبْرَانِيَّةِ وَيُفَسِّرُونَهَا بِالْعَرَبِيَّةِ لِأَهْلِ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُصَدِّقُوا أَهْلَ الْكِتَابِ وَلَا تُكَذِّبُوهُمْ وَقُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا الْآيَةَ . 332

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : வேதக்காரர் ( களான யூதர் ) கள் , தவ்ராத்தை ஹீப்ரூ மொழியில் ஓதி , அதை முஸ்லிம்களுக்கு அரபு மொழியில் விளக்கம் கொடுத்து வந்தார்கள் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ வேதக்காரர்களை ( அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என ) நம்பவும் வேண்டாம் ; ( பொய் என ) மறுக்கவும் வேண்டாம் . ( மாறாக , முஸ்லிம்களே !) நீங்கள் சொல்லுங்கள் : நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் இப்ராஹீம் , இஸ்மாயீல் , இஸ்ஹாக் , யஅகூப் ஆகியோருக்கும் , யஅகூபின் வழித்தோன்றல்களுக்கும் அருளப்பெற்றதையும் , மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் வழங்கப்பெற்றதையும் மேலும் இறைத்தூதர்கள் அனைவருக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பெற்றவை அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் . நாங்கள் அவர்களுள் யாருக்கிடையேயும் எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை . இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கிறோம் `` (2:136) என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 4485)
ஹதீஸ் 333 அத்தியாயம் 8 பாடம் 16

(خ) عَنْ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ عَنْ شَيْءٍ وَكِتَابُكُمْ الَّذِي أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْدَثُ تَقْرَءُونَهُ مَحْضًا لَمْ يُشَبْ وَقَدْ حَدَّثَكُمْ أَنَّ أَهْلَ الْكِتَابِ بَدَّلُوا كِتَابَ اللَّهِ وَغَيَّرُوهُ وَكَتَبُوا بِأَيْدِيهِمْ الْكِتَابَ وَقَالُوا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ لِيَشْتَرُوا بِهِ ثَمَنًا قَلِيلًا أَلَا يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنْ الْعِلْمِ عَنْ مَسْأَلَتِهِمْ لَا وَاللَّهِ مَا رَأَيْنَا مِنْهُمْ رَجُلًا يَسْأَلُكُمْ عَنْ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ . 333

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( மார்க்கம் தொடர்பான ) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் ? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பெற்றுள்ள உங்களது வேதமோ புதியது . கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள் . வேதக்காரர்கள் ( தமக்கு அருளப்பெற்ற ) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து , தம் கரங்களால் வேதத்தை ( மாற்றி ) எழுதிக்கொண்டு , அதன்மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக " இது இறைவனிடமிருந்து வந்ததே ` என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான் . உங்களுக்குக் கிடைத்துள்ள ( மார்க்க ) ஞானம் , வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்கவில்லையா ? அல்லாஹ்வின் மீதாணையாக ! வேதக்காரர்களுள் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற ( வேதத் ) தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே !

Reference: ( புகாரீ : 7363)
ஹதீஸ் 334 அத்தியாயம் 8 பாடம் 16

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كَانَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُنَا عَنْ بَنِي إِسْرَائِيلَ حَتَّى يُصْبِحَ مَا يَقُومُ إِلَّا إِلَى عُظْمِ صَلَاةٍ . 334

அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , பனூ இஸ்ரவேலர்களைப் பற்றி விடியும் வரை எங்களுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள் . கடமையான தொழுகைக்கே தவிர எழவில்லை .

Reference: ( அபூதாவூத் : 3663) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 335 அத்தியாயம் 8 பாடம் 16

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : حَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ، حَدِّثُوا عَنِّي وَلَا تَكْذِبُو . 335

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளை அறிவியுங்கள் . அதனால் குற்றமில்லை . என்னிடமிருந்து கிடைத்த செய்திகளை ( ப் பிறருக்கு ) எடுத்துரையுங்கள் . ( நான் சொன்னதாக வேண்டுமென்றே ) பொய்யுரைக்காதீர்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 11536) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர்தொடர் ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .