17-باب : يحدث القوم بما تبلغه عقولهم
பாடம் 17

பாடம்: 17. மக்களிடம் அவர்கள்தம் அறிவுக்கேற்பப் பேசுதல்

ஹதீஸ் 336 அத்தியாயம் 8 பாடம் 17

(خ) عَنْ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ : حَدِّثُوا النَّاسَ بِمَا يَعْرِفُونَ أَتُحِبُّونَ أَنْ يُكَذَّبَ اللَّهُ وَرَسُولُهُ . 336

அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களிடம் அவர்கள் புரிந்து கொள்பவற்றையே பேசுங்கள் . ( அவர்களுக்குப் புரியாதவற்றைப் பற்றிப் பேசி , அதனால் ) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ( அவர்களால் ) பொய்யர்களென்று கருதப்படுவதை நீங்கள் விரும்புகிறீர்களா ?

Reference: ( புகாரீ : 127)
ஹதீஸ் 337 அத்தியாயம் 8 பாடம் 17

(م) عَنْ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ قَالَ : مَا أَنْتَ بِمُحَدِّثٍ قَوْمًا حَدِيثًا لَا تَبْلُغُهُ عُقُولُهُمْ إِلَّا كَانَ لِبَعْضِهِمْ فِتْنَةً . 337

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பதானது , அவர்களுள் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை .

Reference: ( முஸ்லிம் முன்னுரை : 12)
ஹதீஸ் 338 அத்தியாயம் 8 பாடம் 17

(م) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نُنَزِّلَ النَّاسَ مَنَازِلَهُمْ مَعَ مَا نَطَقَ بِهِ الْقُرْآنُ مِنْ قَوْلِ اللَّهِ تَعَالَى وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ . 338

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நாங்கள் மக்களுக்கு அவரவரது அந்தஸ்தை அளித்திட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் . குர்ஆனும் இதையே கூறுகிறது : கல்வியறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலே ( அவர்களைவிட ) அறிந்தவன் ஒருவன் இருக்கின்றான் (12: 76)

Reference: ( முஸ்லிம் முன்னுரை )