18-باب :الرحلة في طلب العلم
பாடம் 18

பாடம்: 18. கல்வியைத் தேடிப் பயணம் மேற்கொள்ளுதல்

ஹதீஸ் 339 அத்தியாயம் 8 பாடம் 18

(م) عَنْ عُبَادَةَ بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ خَرَجْتُ أَنَا وَأَبِي نَطْلُبُ الْعِلْمَ فِي هَذَا الْحَيِّ مِنْ الْأَنْصَارِ قَبْلَ أَنْ يَهْلِكُوا فَكَانَ أَوَّلُ مَنْ لَقِينَا أَبَا الْيَسَرِ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ غُلَامٌ لَهُ مَعَهُ ضِمَامَةٌ مِنْ صُحُفٍ ,... وذكر الحديث. 339

உபாதா பின் அல்வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நானும் என் தந்தை ( வலீத் பின் உபாதா பின் அஸ்ஸாமித்-ரஹிமஹுல்லாஹ் ) அவர்களும் அன்ஸாரிகளில் குறிப்பிட்ட ஒரு கிளையாரிடம் , அவர்கள் இறப்பதற்குமுன் ( அவர்களிடமுள்ள நபிமொழிக் ) கல்வியைக் கற்றுக் கொள்வதற்காகப் புறப்பட்டோம் . நாங்கள் முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர் அபுல் யசர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையே சந்தித்தோம் . அவர்களுடன் அவர்களுடைய அடிமை ஒருவரும் இருந்தார் . அவரிடம் பதிவேடுகளில் ஒரு தொகுப்பும் இருந்தது ...

Reference: ( முஸ்லிம் : 3006 / 5736)
ஹதீஸ் 340 அத்தியாயம் 8 பாடம் 18

(م) عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ . 340

அப்துல்லாஹ் பின் யஹ்யா பின் அபீகஸீர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் தந்தை யஹ்யா பின் அபீகஸீர் ரஹிமஹுல்லாஹ் , “ உடல் சுகத் ( தைத் தேடுவ ) தினால் கல்வியை அடைய முடியாது `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்லிம் : 612 / 1077)
ஹதீஸ் 341 அத்தியாயம் 8 பாடம் 18

عَنْ كَثِيرِ بْنِ قَيْسٍ قَالَ كُنْتُ جَالِسًا مَعَ أَبِي الدَّرْدَاءِ فِي مَسْجِدِ دِمَشْقَ فَجَاءَهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا الدَّرْدَاءِ إِنِّي جِئْتُكَ مِنْ مَدِينَةِ الرَّسُولِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِحَدِيثٍ بَلَغَنِي أَنَّكَ تُحَدِّثُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا جِئْتُ لِحَاجَةٍ . 341

கஸீர் பின் கைஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் டமாஸ்கஸ் மஸ்ஜிதில் அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அமர்ந்திருந்தேன் . அப்போது அவர்களிடம் ஒருவர் வந்தார் . அவர் , “ அபுத்தர்தா ! நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்ந்த மதீனாவிலிருந்து உம்மிடம் வந்துள்ளேன் . நீர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவித்துள்ளதாக எனக்குச் செய்தி கிடைத்தது . அந்த ஹதீஹுக்காக நான் உம்மிடம் வந்துள்ளேன் . வேறு ஏதேனும் தேவைக்காக நான் வரவில்லை ” என்று கூறினார் . அப்போது அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு , தாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளதாகக் கூறியதாவது : “ ஒருவர் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடந்தால் சொர்க்கம் செல்லும் பாதையில் அவரை அல்லாஹ் நடத்துகின்றான் . வானவர்கள் கல்வியைத் தேடும் ( மாணவர் ) ஒருவரை உவந்து கொண்டதைக் காட்டும் முகமாக தம் இறக்கைகளைக் கீழே தாழ்த்துகின்றனர் . கற்றறிந்த அறிஞர் ஒருவருக்கே வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் தண்ணீரில் வாழும் மீன்கள் உட்பட யாவும் பாவமன்னிப்புக் கோருகின்றன . பக்திமானைவிடக் கல்விமானுக்குள்ள சிறப்பு மற்ற நட்சத்திரங்களைவிடச் சந்திரனுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும் . மார்க்க அறிஞர்கள் இறைத்தூதர்களின் வாரிசுகள் ஆவர் . இறைத்தூதர்கள் பொற்காசுகளுக்கோ வெள்ளிக் காசுகளுக்கோ அவர்களை வாரிசுகளாக்கவில்லை . அவர்கள் இந்தக் கல்விக்குத்தான் வாரிசுகளாக்கியுள்ளனர் . யார் இந்தக் கல்வியைப் பெற்றுக்கொண்டாரோ அவர் நிறைவான பங்கைப் பெற்றுக்கொண்டார் ."

Reference: ( அபூதாவூத் : 3641, திர்மிதீ : 2606 / 2682, இப்னுமாஜா : 223, தாரமீ : 354) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 342 அத்தியாயம் 8 பாடம் 18

عَنْ أَبِي الْعَالِيَةِ قَالَ كُنَّا نَسْمَعُ الرِّوَايَةَ بِالْبَصْرَةِ عَنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ نَرْضَ حَتَّى رَكِبْنَا إِلَى الْمَدِينَةِ فَسَمِعْنَاهَا مِنْ أَفْوَاهِهِمْ . 342

அபுல் ஆலியா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் கூறியதாக பஸ்ராவில் நாங்கள் ஏதேனும் ஹதீஸைச் செவியுற்றால் , ( அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ) நாங்கள் மதீனா சென்று அதை அவர்களின் வாய்களிலிருந்து ( நேரடியாகச் ) செவியுறுகின்ற வரை திருப்தியுற மாட்டோம் .

Reference: ( தாரமீ : 583) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 343 அத்தியாயம் 8 பாடம் 18

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ أَنَّ رَجُلًا مَنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحَلَ إِلَى فَضَالَةَ بْنِ عُبَيْدٍ وَهُوَ بِمِصْرَ فَقَدِمَ عَلَيْهِ وَهُوَ يَمُدُّ لِنَاقَةٍ لَهُ فَقَالَ مَرْحَبًا قَالَ أَمَا إِنِّي لَمْ آتِكَ زَائِرًا وَلَكِنْ سَمِعْتُ أَنَا وَأَنْتَ حَدِيثًا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجَوْتُ أَنْ يَكُونَ عِنْدَكَ مِنْهُ عِلْمٌ قَالَ مَا هُوَ قَالَ كَذَا وَكَذَا .. 343

அப்துல்லாஹ் பின் புரைதா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுள் ஒருவர் , எகிப்தில் இருந்த ஃபளாலா பின் உபைத் அவர்களிடம் பயணம் செய்து சென்றார் . இவர் சென்ற நேரத்தில் அவர் தம் ஒட்டகத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் . இவரைப் பார்த்ததும் , “ வாருங்கள் ” என்று வரவேற்றார் . பின்னர் , “ நான் உம்மை ( வெறுமனே ) சந்திக்க வரவில்லை . மாறாக நானும் நீரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸைச் செவியுற்றுள்ளோம் . அது குறித்து ( வேறு ) ஏதேனும் கல்வியறிவு உம்மிடம் கிடைக்கும் என எண்ணியே நான் உம்மிடம் வந்தேன் ” என்று கூறினார் . அதற்கு அவர் , “ அது என்ன ( ஹதீஸ் )?” என்று வினவினார் . அதற்கு அவர் , “ இன்னின்னது ...” என்று கூறினார் .

Reference: ( தாரமீ : 590) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 344 அத்தியாயம் 8 பாடம் 18

عَنِ الْحَارِثِ بْنِ مُعَاوِيَةَ الْكِنْدِيِّ أَنَّهُ رَكِبَ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَسْأَلُهُ عَنْ ثَلَاثِ خِلَالٍ قَالَ فَقَدِمَ الْمَدِينَةَ فَسَأَلَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا أَقْدَمَكَ قَالَ لِأَسْأَلَكَ عَنْ ثَلَاثِ خِلَالٍ قَالَ وَمَا هُنَّ قَالَ رُبَّمَا كُنْتُ أَنَا وَالْمَرْأَةُ فِي بِنَاءٍ ضَيِّقٍ فَتَحْضُرُ الصَّلَاةُ فَإِنْ صَلَّيْتُ أَنَا وَهِيَ كَانَتْ بِحِذَائِي وَإِنْ صَلَّتْ خَلْفِي خَرَجَتْ مِنْ الْبِنَاءِ فَقَالَ عُمَرُ تَسْتُرُ بَيْنَكَ وَبَيْنَهَا بِثَوْبٍ ثُمَّ تُصَلِّي بِحِذَائِكَ إِنْ شِئْتَ وَعَنْ الرَّكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ فَقَالَ نَهَانِي عَنْهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَعَنْ الْقَصَصِ فَإِنَّهُمْ أَرَادُونِي عَلَى الْقَصَصِ فَقَالَ مَا شِئْتَ كَأَنَّهُ كَرِهَ أَنْ يَمْنَعَهُ قَالَ إِنَّمَا أَرَدْتُ أَنْ أَنْتَهِيَ إِلَى قَوْلِكَ قَالَ أَخْشَى عَلَيْكَ أَنْ تَقُصَّ فَتَرْتَفِعَ عَلَيْهِمْ فِي نَفْسِكَ ثُمَّ تَقُصَّ فَتَرْتَفِعَ حَتَّى يُخَيَّلَ إِلَيْكَ أَنَّكَ فَوْقَهُمْ بِمَنْزِلَةِ الثُّرَيَّا فَيَضَعَكَ اللَّهُ تَحْتَ أَقْدَامِهِمْ يَوْمَ الْقِيَامَةِ بِقَدْرِ ذَلِكَ . 344

அப்துர் ரஹ்மான் பின் ஜுபைர் பின் ஜுபைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஹாரிஸ் பின் முஆவியா அல்கின்தீ ரஹிமஹுல்லாஹ் , உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மூன்று செய்திகளைப் பற்றி ( மதீனா சென்று ) கேட்கப் புறப்பட்டார்கள் . அவர் மதீனா வந்ததும் , அவரிடம் உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ உமது வருகையின் காரணம் என்ன ?`` என்று கேட்டார்கள் . “ மூன்று செய்திகளை உங்களிடம் நான் கேட்க வேண்டும் ” என்று கூறினார் . “ அவை என்ன ?” என்று கேட்டதும் , “ சில சமயம் நெருக்கடியான வீட்டில் நான் ஒரு பெண்ணுடன் இருக்கிறேன் . அப்போது தொழுகைக்குரிய நேரம் வந்து விடுகிறது . நான் தொழ வைத்தால் , அந்தப் பெண் எனக்குச் சமமாகத்தான் நிற்க வேண்டியது வரும் . என் பின்னே அப்பெண் தொழுதால் அவள் வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டியது வரும் . ( என்ன செய்வது )`` என்று கேட்டார் . உடனே உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ உமக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையே ஓர் ஆடையைத் திரையாக்கி , பின் உமக்குச் சமமாக நிறுத்தி , நீ தொழு `` என்று பதில் கூறினார்கள் . அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி ( கேட்டார் ). “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வாறு தொழ என்னைத் தடுத்தார்கள் ”` என்று பதில் கூறினார்கள் . கனவிற்குப் பலன் கூறும்படி மக்கள் என்னை விரும்பி வருகிறார்கள் . கனவிற்குப் பலன் கூறலாமா ? என்பது பற்றிக் கேட்டார் . “ நீ விரும்பியபடி நடந்துகொள் `` என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு பதில் கூறினார்கள் . அவர்களின் பதில் , அதைத் தடுக்க வெறுப்பது போல் இருந்தது . “ உங்களின் வார்த்தை மூலம் அதை நான் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன் `` என்றார் . “ நீ கனவுக்கு விளக்கம் கூறி , உன் உள்ளத்தில் அவர்களிடம் நீ உயர்வாக இருப்பதாகக் கருதும் நிலை ஏற்படுவதையே உம்மிடம் நான் பயப்படுகிறேன் . பின்பு நீ கனவுக்கு விளக்கம் கூறி , நீ உயர்வாகக் கருத ஆரம்பித்தால் நீ ஒரு நட்சத்திர அந்தஸ்தில் அவர்களைவிட உயர்வாகக் கருதத் தொடங்குவாய் . இதனால் ( அல்லாஹ் கோபமுற்று ) அவர்களின் கால்களுக்கும் கீழே உம்மை மறுமை நாள் வரை வைத்துவிடுவான் `` என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 111) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .