பாடம்: 22. அல்லாஹ் அல்லாத நோக்கத்திற்காகக் கல்வியைத் தேடுதல்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنْ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ يَعْنِي رِيحَهَا . 350
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் திருப்தியை ( மட்டுமே ) நாடிக் கற்க வேண்டிய கல்வியை யார் உலகாதாயத்தை நாடிக் கற்றாரோ அவர் மறுமைநாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார் .
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ وَلَا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ وَلَا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَالنَّارُ النَّارُ . 351
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அறிஞர்களோடு பெருமையடிப்பதற்காகவும் அறிவிலிகளோடு விவாதம் செய்வதற்காகவும் கல்வியைக் கற்காதீர்கள் . அதை வைத்துக்கொண்டு சபைகளைத் தேடாதீர்கள் . யார் அவ்வாறு செய்கின்றாரோ ( அவருக்கு ) நரகமே , ( அவருக்கு ) நரகமே .
عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمْ جِدَالُ الْمُنَافِقِ عَلِيمِ اللِّسَانِ . 352
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உங்களுள் மிகவும் அஞ்சுவது மொழியறிவுகொண்ட நயவஞ்சகனோடு ( நீங்கள் ) தர்க்கம் செய்வதைத்தான் .
عَنْ ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ طَلَبَ الْعِلْمَ لِيُجَارِيَ بِهِ الْعُلَمَاءَ أَوْ لِيُمَارِيَ بِهِ السُّفَهَاءَ أَوْ يَصْرِفَ بِهِ وُجُوهَ النَّاسِ إِلَيْهِ أَدْخَلَهُ اللَّهُ النَّارَ . 353
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக கஅப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் கற்றோரிடம் விதண்டா வாதம் புரிவதற்காக அல்லது கல்லாதோரிடம் விளம்பரம் தேடுவதற்காக அல்லது மக்களின் முகங்களைத் தம் பக்கம் திருப்புவதற்காகக் கல்வியைத் தேடுகிறாரோ அவரை அல்லாஹ் நரகத்தில் நுழையச் செய்வான் .