பாடம்: 27. கல்வியைப் பரிமாறிக்கொள்தலும் அது குறித்து வினவுதலும்
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ تَذَاكَرُوا الْحَدِيثَ فَإِنَّ الْحَدِيثَ يُهَيِّجُ الْحَدِيثَ . 361
அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஹதீஸை ஒருவருக்கொருவர் நினைவுகூருங்கள் . ஏனென்றால் ஹதீஸை நினைவுகூர்கின்ற அந்தப் பேச்சானது ஹதீஸைத் ( தெரிந்துகொள்ளத் ) தூண்டும் .
عَنْ الْأَعْمَشِ قَالَ كَانَ إِسْمَعِيلُ بْنُ رَجَاءٍ يَجْمَعُ صِبْيَانَ الْكُتَّابِ يُحَدِّثُهُمْ يَتَحَفَّظُ بِذَاكَ. 362
அஉமஷ் ரஹிமஹுல்லாஹ் அறிவிப்பதாவது : இஸ்மாயீல் பின் ரஜாஉ அவர்கள் பாலர்வகுப்புச் சிறுவர்களை ஒன்றுகூட்டி அவர்களுக்கு ஹதீஸை அறிவிப்பார்கள் . அதன்மூலம் அவர்கள் ( தமக்குத்தாமே ) மனனம் செய்துகொள்வார்கள் .
عَنْ مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ أَبِيهِ قَالَ كَانَ الْحَارِثُ بْنُ يَزِيدَ الْعُكْلِيُّ وَابْنُ شُبْرُمَةَ وَالْقَعْقَاعُ بْنُ يَزِيدَ وَمُغِيرَةُ إِذَا صَلَّوْا الْعِشَاءَ الْآخِرَةَ جَلَسُوا فِي الْفِقْهِ فَلَمْ يُفَرِّقْ بَيْنَهُمْ إِلَّا أَذَانُ الصُّبْحِ . 363
முஹம்மது பின் ஃபுளைல் ரஹிமஹுல்லாஹ் தம் தந்தையிடமிருந்து அறிவிப்பதாவது : ஹாரிஸ் பின் யஸீத் அல்உக்லீ , இப்னு ஜுப்ருமா , கஉகாஉ பின் யஸீத் , முஃகீரா ஆகியோர் இஷாத் தொழுகையைத் தொழுதுவிட்டால் , கல்வியைக் கற்றுக்கொள்ள அமர்ந்துவிடுவார்கள் . ஸுப்ஹு உடைய பாங்கு ( அதான் ) தவிர வேறு எதுவும் அவர்களைக் கலைப்பதில்லை .
عَنْ عَبْدُ اللَّهِ إِنَّ لِكُلِّ شَيْءٍ آفَةً وَآفَةُ الْعِلْمِ النِّسْيَانُ. 364
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வொரு பொருளுக்கும் ஆபத்து உண்டு . கல்வியின் ஆபத்து மறதியாகும் .
عَنْ عَلِيٌّ تَذَاكَرُوا هَذَا الْحَدِيثَ وَتَزَاوَرُوا فَإِنَّكُمْ إِنْ لَمْ تَفْعَلُوا يَدْرُسْ . 365
அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இந்த ஹதீஸை ஒருவருக்கொருவர் நினைவுகூருங்கள் . ஒருவருக்கொருவர் சந்தித்துப் பரிமாறிக்கொள்ளுங்கள் . நிச்சயமாக நீங்கள் அவ்வாறு செய்யவில்லையானால் அது அழிந்துவிடும் .
عَنْ عِكْرِمَةَ قَالَ كَانَ ابْنُ عَبَّاسٍ يَضَعُ فِي رِجْلَيَّ الْكَبْلَ وَيُعَلِّمُنِي الْقُرْآنَ وَالسُّنَنَ . 366
இக்ரிமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு என் இரு ( முட்டிக் ) கால்கள்மீது முன்கையை வைப்பார்கள் . எனக்குக் குர்ஆனையும் சுன்னத்துகளையும் கற்பிப்பார்கள் .