பாடம்: 29. விதண்டாவாதம் செய்தல் குறித்து வந்துள்ளவை
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى كَانُوا عَلَيْهِ إِلَّا أُوتُوا الْجَدَلَ ثُمَّ تَلَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذِهِ الْآيَةَ مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ . 369
அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நல்வழியில் இருந்துவந்த ஒரு சமுதாயம் வழிதவறிப் போகிறதென்றால் அவர்கள் விதண்டாவாதம் வழங்கப்பட்டனர் என்றே கொள்க `` என்று கூறிவிட்டு , “ இல்லை , அவர்கள் குதர்க்கவாதம் பேசும் கூட்டத்தார் ஆவர் `` (43:58) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْمِرَاءُ فِي الْقُرْآنِ كُفْرٌ . 370
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : குர்ஆன் குறித்து விதண்டாவாதம் செய்தல் இறைமறுப்பு ஆகும் .
عَنْ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ يَقُولُ مَنْ جَعَلَ دِينَهُ غَرَضًا لِلْخُصُومَاتِ أَكْثَرَ التَّنَقُّلَ . 371
உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : யார் இந்த மார்க்கத்தை வாதங்கள் செய்வதற்கான பகடைக்காயாக ஆக்கிக்கொண்டாரோ அவர் ( வார்த்தைகளை ) அதிகமாக இடம் மாற்றிவிட்டார் .