30-باب : بذل العلم لأهله
பாடம்
30
பாடம்: 30. கல்வியை அதற்குரியவர்களிடம் சேர்த்தல்
ஹதீஸ் 372
அத்தியாயம் 8
பாடம் 30
عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ قَالَ لَا تُحَدِّثْ الْبَاطِلَ الْحُكَمَاءَ فَيَمْقُتُوكَ وَلَا تُحَدِّثْ الْحِكْمَةَ لِلسُّفَهَاءِ فَيُكَذِّبُوكَ وَلَا تَمْنَعْ الْعِلْمَ أَهْلَهُ فَتَأْثَمَ وَلَا تَضَعْهُ فِي غَيْرِ أَهْلِهِ فَتُجَهَّلَ إِنَّ عَلَيْكَ فِي عِلْمِكَ حَقًّا كَمَا أَنَّ عَلَيْكَ فِي مَالِكَ حَقًّا . 372
கஸீர் பின் முர்ரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : தவறானதை அறிஞர்களிடம் கூறாதே . அவர்கள் உன்னிடம் கோபப்படுவார்கள் . ஞானத்தை அறிவிலிகளிடம் கூறாதே . அவர்கள் உன்னைப் பொய்யன் எனக் கூறுவார்கள் . கல்வியை அதற்குரியவர்களிடம் ( சேர்ப்பதில் ) தடையை ஏற்படுத்தாதே . ( அவ்வாறு செய்தால் ) நீ பாவம் செய்தவனாவாய் . தகுதி இல்லாதவர்களிடம் அதை ( ச் சேர்த்து ) வைக்காதே . ( அவ்வாறு செய்தால் ) நீ முட்டாளாக்கப்படுவாய் . உன் செல்வத்தில் உன்மீது கடமை இருப்பதைப்போல் உன் கல்வியிலும் உன்மீது கடமை உள்ளது .
Reference: ( தாரமீ : 390) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .