பாடம்: 32. அறிஞர்களின் கருத்து வேறுபாடு
عَنْ حُمَيْدٍ قَالَ قِيلَ لِعُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَوْ جَمَعْتَ النَّاسَ عَلَى شَيْءٍ فَقَالَ مَا يَسُرُّنِي أَنَّهُمْ لَمْ يَخْتَلِفُوا قَالَ ثُمَّ كَتَبَ إِلَى الْآفَاقِ وَإِلَى الْأَمْصَارِ لِيَقْضِ كُلُّ قَوْمٍ بِمَا اجْتَمَعَ عَلَيْهِ فُقَهَاؤُهُمْ . 376
ஹுமைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் , “ மக்கள் அனைவரையும் ஒரே விஷயத்தில் ஒன்றிணைத்தால் என்ன ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அவர்கள் கருத்து வேறுபாடு கொள்ளாமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தராது ” என்று கூறினார்கள்.அறிவிப்பாளர் கூறுகிறார் : மேலும் அவர்கள் ஒவ்வொரு சமுதாய மக்களும் தத்தம் அறிஞர்கள் ஒன்றுபட்ட விஷயங்களைக்கொண்டு ( தமக்குள் ) தீர்ப்பளிக்கட்டும் என்று பல்வேறு ஊர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் .
عَنْ سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ كَانَ سَلَّامٌ يَذْكُرُ عَنْ أَيُّوبَ-السَّخْتِيِا نيَّ- قَالَ إِذَا أَرَدْتَ أَنْ تَعْرِفَ خَطَأَ مُعَلِّمِكَ فَجَالِسْ غَيْرَهُ. 377
சயீத் பின் ஆமிர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : சல்லாம் அவர்கள் , அய்யூப் - அஸ்ஸக்த்தியானீ - அவர்களை நினைவுகூர்ந்து கொண்டிருந்தார்கள் . நீ உன் ஆசிரியரின் தவறுகளைத் தெரிந்துகொள்ள நாடினால் , ( அவர் அல்லாத ) மற்றவர்களிடம் அமர்ந்துகொள் ” என்று கூறினார்கள் .