பாடம்: 35. கல்வியுடையோரைக் கண்ணியப்படுத்துதலும் கல்விக்காகச் சிரமத்தை மேற்கொள்ளலும்
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ وُجِدَ أَكْثَرُ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ هَذَا الْحَيِّ مِنْ الْأَنْصَارِ وَاللَّهِ إِنْ كُنْتُ لَآتِي الرَّجُلَ مِنْهُمْ فَيُقَالُ هُوَ نَائِمٌ فَلَوْ شِئْتُ أَنْ يُوقَظَ لِي فَأَدَعُهُ حَتَّى يَخْرُجَ لِأَسْتَطِيبَ بِذَلِكَ حَدِيثَهُ . 386
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மிகுதியான ஹதீஸ்கள் அன்ஸாரிகள் வாழும் இந்தப் பகுதியில்தான் பெற்றுக்கொள்ளப்பட்டன . அல்லாஹ்வின் மீதாணையாக ! அவர்களுள் ஒருவரிடம் நான் ( ஹதீஸை நாடி ) வந்தால் , அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படும் . நான் நாடினால் எனக்காக அவர் எழுப்பப்பட்டிருப்பார் . ( எனினும் ) நான் அவர் ( தம் தூக்கத்திலிருந்து விழித்து ) வெளியே வரும் வரை அவரை விட்டுவிடுவேன் . ஏனென்றால் அந்த ஹதீஸை அவரிடமிருந்து நல்ல மனநிலையில் நான் பெறவேண்டுமென்பதற்காக ( அவ்வாறு செய்தேன் ).
عَنْ الزُّهْرِيِّ قَالَ كُنْتُ آتِي بَابَ عُرْوَةَ فَأَجْلِسُ بِالْبَابِ وَلَوْ شِئْتُ أَنْ أَدْخُلَ لَدَخَلْتُ وَلَكِنْ إِجْلَالًا لَهُ . 387
அஸ்ஸுஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் உர்வாவின் வீட்டிற்கு வந்துபோய்க்கொண்டிருந்தேன் . ( வீட்டிற்குச் சென்று ) கதவருகே அமர்ந்துவிடுவேன் . நான் உள்ளே செல்ல நாடியிருந்தால் ( வீட்டிற்குள் ) நுழைந்திருப்பேன் . எனினும் அவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு ( அவ்வாறு நான் செய்யவில்லை ).
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ لِرَجُلٍ مِنْ الْأَنْصَارِ يَا فُلَانُ هَلُمَّ فَلْنَسْأَلْ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِنَّهُمْ الْيَوْمَ كَثِيرٌ فَقَالَ وَا عَجَبًا لَكَ يَا ابْنَ عَبَّاسٍ أَتَرَى النَّاسَ يَحْتَاجُونَ إِلَيْكَ وَفِي النَّاسِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَرَى ؟... الحديث وفيه : فَبَقِيَ الرَّجُلُ حَتَّى رَآنِي وَقَدْ اجْتَمَعَ النَّاسُ عَلَيَّ فَقَالَ كَانَ هَذَا الْفَتَى أَعْقَلَ مِنِّي . 388
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வஃபாத் ஆனபோது அன்ஸாரிகளுள் ஒருவரிடம் , “ இன்னாரே ! வாருங்கள் . நபித்தோழர்களிடம் நாம் ( தெரியாததைக் ) கேட்போம் . ஏனென்றால் இன்று அவர்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள் ” என்றேன் . அதற்கு அவர் , “ இப்னு அப்பாஸ் அவர்களே ! உம்மைக் கண்டு ஆச்சரியமாக இருக்கிறது . மக்கள் உம்மிடம் தேவையாகுவதை நீர் பார்க்கின்றீரா ? ( இல்லையா ?) நபித்தோழர்களுள் யாரை நீர் காண்கிறீர் ?... ” அதன் தொடரில் உள்ளதாவது : மக்கள் என்னிடம் ஒன்று சேர்ந்துவிட்டதைக் கண்ட அந்த மனிதர் , “ இந்த இளைஞர் என்னைவிட மிகவும் அறிவாளி ” என்று கூறினார் .