38-باب : فضل العلم على العبادة
பாடம் 38

பாடம்: 38. வழிபாட்டைவிடக் கல்வியின் சிறப்பு

ஹதீஸ் 400 அத்தியாயம் 8 பாடம் 38

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ أَحَدُهُمَا عَابِدٌ وَالْآخَرُ عَالِمٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ وَأَهْلَ السَّمَوَاتِ وَالْأَرَضِينَ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الْحُوتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْ . 400

அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரண்டு மனிதர்களைப் பற்றிப் பேசப்பட்டது . அவர்களுள் ஒருவர் கல்விமான் ஆவார் . மற்றவர் பக்திமான் ஆவார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " ஒரு பக்திமானைவிடக் கல்விமானுக்குள்ள சிறப்பு உங்களில் கடைநிலையில் உள்ள ஒருவரைவிட ( இறைத்தூதராகிய ) எனக்குள்ள சிறப்பைப் போன்றதாகும் " என்று கூறிவிட்டு , அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் விண்ணிலும் மண்ணிலும் வசிப்போரும் பொந்துகளில் வாழும் எறும்புகள் , ( தண்ணீரில் வாழும் ) மீன்கள் உட்பட யாவுமே மக்களுக்கு நல்லதைக் கற்பிப்பவருக்காக அருள் வேண்டிப் பிரார்த்தனை செய்கின்றன " என்று கூறினார்கள் .

Reference: ( திர்மிதீ : 2609 / 2685. தாரமீ : 297) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 401 அத்தியாயம் 8 பாடம் 38

عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ قَالَ مَجْلِسٌ يُتَنَازَعُ فِيهِ الْعِلْمُ أَحَبُّ إِلَيَّ مِنْ قَدْرِهِ صَلَاةً لَعَلَّ أَحَدَهُمْ يَسْمَعُ الْكَلِمَةَ فَيَنْتَفِعُ بِهَا سَنَةً أَوْ مَا بَقِيَ مِنْ عُمُرِهِ . 401

வஹ்ப் பின் முநப்பிஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வி குறித்து விவாதிக்கப்படுகின்ற சபை - அந்த அளவிற்குத் தொழுவதைவிட - எனக்கு மிகவும் விருப்பமானது . ( விவாதிக்கப்படுகின்ற அச்சபையிலிருந்து ) அவர்களுள் ஒருவர் ஒரு வார்த்தையைச் செவியுறலாம் . அதன்மூலம் ஓராண்டுக்காலம் அவர் பயன்பெறலாம் . அல்லது அவர் தம் வாழ்நாளெல்லாம் பயன்பெறலாம் .

Reference: ( தாரமீ : 334) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .