40-باب : التوقي الفتيا والخوف منها
பாடம் 40

பாடம்: 40. மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் பேணுதலைக் கடைப்பிடித்தலும் அதற்காக அஞ்சலும்

ஹதீஸ் 403 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أُفْتِيَ بِغَيْرِ عِلْمٍ كَانَ إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ . 403

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ( மார்க்க ) ஆதாரம் ஏதுமின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவர் ( அந்தத் தவறான தீர்ப்பின் படி செயல்பட்டால் ) அதற்குரிய பாவம் அந்தத் தீர்ப்பை வழங்கியவரையே சாரும் .

Reference: ( அபூதாவூத் : 3657, இப்னுமாஜா : 52 / 53, தாரமீ : 159) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 404 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَنْ أَفْتَى بِفُتْيَا يُعَمَّى عَلَيْهَا فَإِثْمُهَا عَلَيْهِ . 404

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் சிந்திக்காமல் மார்க்கத் தீர்ப்பு வழங்கினாரோ ( அந்தத் தவறான தீர்ப்பின்படி செயல்பட்டால் ) அதற்குரிய பாவம் அ( ந்தத் தீர்ப்பை வழங்கிய ) வரையே சாரும் .

Reference: ( தாரமீ : 162) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 405 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ أَبِي سُهَيْلٍ قَالَ كَانَ عَلَى امْرَأَتِي اعْتِكَافُ ثَلَاثَةِ أَيَّامٍ فِي الْمَسْجِدِ الْحَرَامِ فَسَأَلْتُ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ وَعِنْدَهُ ابْنُ شِهَابٍ قَالَ قُلْتُ عَلَيْهَا صِيَامٌ قَالَ ابْنُ شِهَابٍ لَا يَكُونُ اعْتِكَافٌ إِلَّا بِصِيَامٍ فَقَالَ لَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ أَعَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا قَالَ فَعَنْ أَبِي بَكْرٍ قَالَ لَا قَالَ فَعَنْ عُمَرَ قَالَ لَا قَالَ فَعَنْ عُثْمَانَ قَالَ لَا قَالَ عُمَرُ مَا أَرَى عَلَيْهَا صِيَامًا . 405

அபூசுஹைல் நாஃபிஉ பின் மாலிக் அல்அஸ்பஹீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் மனைவி மஸ்ஜிதுல் ஹராமில் மூன்று நாள்கள் இஉத்திகாஃப் இருக்க வேண்டியது இருந்தது . எனவே நான் உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன் . அப்போது ( அங்கு ) அவர்களுடன் இப்னு ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் இருந்தார்கள் . “( அதாவது இஉத்திகாஃப் இருக்கும்போது ) அவர் நோன்பு நோற்க வேண்டுமா ?” என்று கேட்டேன் . அதற்கு இப்னு ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் , “ நோன்பின்றி இஉத்திகாஃப் இல்லை ” என்றார்கள் . அப்போது அவரிடம் , உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் , “ இதை நீர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . “ உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாகச் சொல்கின்றீரா ?” என்று வினவ , அவர் “ இல்லை ” என்றார் . அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் , “ அவர்மீது நோன்பு ( கடமை ) இல்லை என்றே நான் கருதுகிறேன் ” என்றார்கள் . நான் ( அங்கிருந்து ) புறப்பட்டுச் சென்றேன் . ( பின்னர் ) தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் , அதாஉ பின் அபீரபாஹ் ரஹிமஹுல்லாஹ் ஆகிய இருவரையும் பார்த்தேன் . ( இவ்விஷயம் குறித்து ) அவ்விருவரிடம் கேட்டேன் . அதற்கு தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் , “ இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்மீது நோன்பு - அவர் விருப்பப்பட்டு நோற்றாலே தவிர - இல்லை என்றே கூறிவந்தார்கள் ” என்றார் . ( அப்போது அங்கிருந்த ) அதாஉ ரஹிமஹுல்லாஹ் “ என் கருத்தும் அதுதான் ” என்றார் .

Reference: ( தாரமீ : 164) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 406 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ مَيْمُونٍ أَبِي حَمْزَةَ قَالَ قَالَ لِي إِبْرَاهِيمُ يَا أَبَا حَمْزَةَ وَاللَّهِ لَقَدْ تَكَلَّمْتُ وَلَوْ وَجَدْتُ بُدًّا مَا تَكَلَّمْتُ وَإِنَّ زَمَانًا أَكُونُ فِيهِ فَقِيهَ أَهْلِ الْكُوفَةِ زَمَانُ سُوءٍ . 406

மைமூன் அபீஹம்ஸா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இப்ராஹீம் அந்நகயீ ரஹிமஹுல்லாஹ் , “ அல்லாஹ்வின்மீதாணையாக நான் ( நிறையப் ) பேசிவிட்டேன் . அவசியம் ஏற்படவில்லையானால் நான் பேசியிருக்க மாட்டேன் . நான் கூஃபா வாழ் மக்களுக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்கும் அறிஞராக இருக்கும் காலம் கெட்ட காலமாகவே இருக்கும் ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 202)
ஹதீஸ் 407 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ عُمَيْرِ بْنِ إِسْحَقَ قَالَ لَمَنْ أَدْرَكْتُ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكْثَرُ مِمَّنْ سَبَقَنِي مِنْهُمْ فَمَا رَأَيْتُ قَوْمًا أَيْسَرَ سِيرَةً وَلَا أَقَلَّ تَشْدِيدًا مِنْهُمْ . 407

உமர் பின் இஸ்ஹாக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுள் நான் சந்தித்த பலர் என்னைவிட ( வயதில் ) முந்தியோராகவே இருந்தனர் . உடலமைப்பில் அவர்களைவிட மென்மையானவர்களையோ அவர்களைவிட மிகக் குறைந்த வன்மை உடையவர்களையோ நான் காணவில்லை .

Reference: ( தாரமீ : 128) இதன் அறிவிப்பாளர்தொடர் தரமானது .
ஹதீஸ் 408 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ قَالَ قُلْتُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ مَا لَكَ لَا تَقُولُ فِي الطَّلَاقِ شَيْئًا قَالَ مَا مِنْهُ شَيْءٌ إِلَّا قَدْ سَأَلْتُ عَنْهُ وَلَكِنِّي أَكْرَهُ أَنْ أُحِلَّ حَرَامًا أَوْ أُحَرِّمَ حَلَالًا . 408

ஜஅஃபர் பின் இயாஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் சஈத் பின் ஜுபுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ தாங்கள் ஏன் தலாக் குறித்து எதுவும் சொல்வதில்லை ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , அது குறித்து நான் கேட்டுத் தெரிந்துகொள்ளாதது எதுவும் இல்லை . எனினும் தடைசெய்யப்பட்டதை ஆகுமானதாகவோ ஆகுமானதைத் தடை செய்யப்பட்டதாகவோ ஆக்குவதை நான் விரும்பவில்லை ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 136) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 409 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى يَقُولُ لَقَدْ أَدْرَكْتُ فِي هَذَا الْمَسْجِدِ عِشْرِينَ وَمِائَةً مِنْ الْأَنْصَارِ وَمَا مِنْهُمْ مِنْ أَحَدٍ يُحَدِّثُ بِحَدِيثٍ إِلَّا وَدَّ أَنَّ أَخَاهُ كَفَاهُ الْحَدِيثَ وَلَا يُسْأَلُ عَنْ فُتْيَا إِلَّا وَدَّ أَنَّ أَخَاهُ كَفَاهُ الْفُتْيَا . 409

அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இந்த மஸ்ஜிதில் நூற்று இருபது அன்ஸாரித் தோழர்களைப் பார்த்துள்ளேன் . அவர்களுள் ஒருவர் ஹதீஸை அறிவித்தால் , அவர் முன் உள்ள சகோதரர் அந்த ஹதீஸ் தமக்குப் போதுமென எண்ணுமளவிற்கு அறிவிப்பார் . அவர்களுள் ஒருவரிடம் மார்க்கத் தீர்ப்பு ஏதேனும் கேட்டால் அவர் முன் உள்ள சகோதரர் அந்த மார்க்கத் தீர்ப்பு தமக்குப் போதுமென எண்ணுமளவிற்குச் சொல்வார் .

Reference: ( தாரமீ : 137) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 410 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ ابْنِ الْمُنْكَدِرِ قَالَ إِنَّ الْعَالِمَ يَدْخُلُ فِيمَا بَيْنَ اللَّهِ وَبَيْنَ عِبَادِهِ فَلْيَطْلُبْ لِنَفْسِهِ الْمَخْرَجَ . 410

இப்னுல் முன்கதிர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : திண்ணமாக ஓர் ( இஸ்லாமிய ) அறிஞர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நுழை ( ந்து இறைவனை அடைவதற்கான வழியைக் காட்டு ) கிறார் . எனவே ( உங்களுள் ஒவ்வொருவரும் ) தமக்காக ( நரகத்திலிருந்து ) வெளியேறுகின்ற வழியைத் தேடிக்கொள்ளட்டும் .

Reference: ( தாரமீ : 139) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 411 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ الصَّلْتُ بْنُ رَاشِدٍ قَالَ سَأَلْتُ طَاوُسًا عَنْ مَسْأَلَةٍ فَقَالَ لِي كَانَ هَذَا قُلْتُ نَعَمْ قَالَ آللَّهِ قُلْتُ آللَّهِ ثُمَّ قَالَ إِنَّ أَصْحَابَنَا أَخْبَرُونَا عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ أَنَّهُ قَالَ يَا أَيُّهَا النَّاسُ لَا تَعْجَلُوا بِالْبَلَاءِ قَبْلَ نُزُولِهِ فَيُذْهَبُ بِكُمْ هَا هُنَا وَهَا هُنَا فَإِنَّكُمْ إِنْ لَمْ تَعْجَلُوا بِالْبَلَاءِ قَبْلَ نُزُولِهِ لَمْ يَنْفَكَّ الْمُسْلِمُونَ أَنْ يَكُونَ فِيهِمْ مَنْ إِذَا سُئِلَ سَدَّدَ وَإِذَا قَالَ : وُفِّقَ . 411

ஸல்த் பின் ராஷித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு பிரச்சனை ( முஸ்அலா ) குறித்துக் கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ இது நடந்ததா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ ஆம் !” என்றேன் . “ அல்லாஹ்வின் மீது ஆணையாகவா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ அல்லாஹ்வின்மீது ஆணையாக !” என்றேன் . பிறகு அவர்கள் சொன்னார்கள் : முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து நம்முடைய தோழர்கள் நமக்கு அறிவித்தார்கள் . மக்களே ! சோதனை இறங்குவதற்கு முன்னரே , அது இறங்க வேண்டுமென அவசரப்படாதீர்கள் . அப்படிச் செய்தால் இங்குமங்கும் உங்களை அது கொண்டு சென்றுவிடும் . நீங்கள் சோதனை இறங்குவதற்குமுன் , அது இறங்க வேண்டுமென அவசரப்படவில்லையானால் , முஸ்லிம்களுள் யாரேனும் ஒருவர் வினாத் தொடுக்கப்பட்டால் அதைச் சீராகச் சொல் ( லி வழிகாட்டு ) வார் . அவர் ஏதேனும் கூறினால் , அதற்கு நல்வாய்ப்பு வழங்கப்படுவார் .

Reference: ( தாரமீ : 155) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 412 அத்தியாயம் 8 பாடம் 40

عَنْ أَبِي نَضْرَةَ قَالَ لَمَّا قَدِمَ أَبُو سَلَمَةَ الْبَصْرَةَ أَتَيْتُهُ أَنَا وَالْحَسَنُ فَقَالَ لِلْحَسَنِ أَنْتَ الْحَسَنُ مَا كَانَ أَحَدٌ بِالْبَصْرَةِ أَحَبَّ إِلَيَّ لِقَاءً مِنْكَ وَذَلِكَ أَنَّهُ بَلَغَنِي أَنَّكَ تُفْتِي بِرَأْيِكَ فَلَا تُفْتِ بِرَأْيِكَ إِلَّا أَنْ تَكُونَ سُنَّةٌ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ كِتَابٌ مُنْزَلٌ . 412

அபூநள்ரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அபூசலமா ரளியல்லாஹு அன்ஹு பஸ்ரா வந்திருந்தபோது , நானும் ஹஸன் பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவர்களிடம் வந்தோம் . அப்போது அவர்கள் , ஹஸன் பஸ்`ரீ அவர்களிடம் , “ நீங்கள்தாம் ஹஸனா ? இந்த பஸ்ராவில் உம்மைச் சந்திப்பதைவிட எனக்குப் பிரியமானவர் யாருமில்லை . ஏனென்றால் தாங்கள் உங்களின் ( சொந்தக் ) கருத்தின்மூலம் மார்க்கத் தீர்ப்பு வழங்குவதாக எனக்குச் செய்தி கிடைத்தது . அவ்வாறு தாங்கள் உங்களின் ( சொந்தக் ) கருத்தின்மூலம் மார்க்கத் தீர்ப்பு வழங்காதீர் . ( மாறாக ) அ( ந்தத் தீர்ப்பான ) து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வந்துள்ள சுன்னத்தாக இருக்க வேண்டும் . அல்லது இறக்கியருளப்பட்ட வேதமாக இருக்க வேண்டும் ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 165) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .