41-باب : إعظام العلم وصيانته
பாடம் 41

பாடம்: 41. (மார்க்கக்) கல்வியை மதித்தலும் அதைப் பாதுகாத்தலும்

ஹதீஸ் 413 அத்தியாயம் 8 பாடம் 41

عَنْ الْحَسَنِ أَنَّهُ دَخَلَ السُّوقَ فَسَاوَمَ رَجُلًا بِثَوْبٍ فَقَالَ هُوَ لَكَ بِكَذَا وَكَذَا وَاللَّهِ لَوْ كَانَ غَيْرَكَ مَا أَعْطَيْتُهُ فَقَالَ فَعَلْتُمُوهَا فَمَا رُئِيَ بَعْدَهَا مُشْتَرِيًا مِنْ السُّوقِ وَلَا بَائِعًا حَتَّى لَحِقَ بِاللَّهِ . 413

அப்துல் அஃலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் ( ஒரு நாள் ) கடைவீதிக்குச் சென்று ஒருவரிடம் துணியை விலைபேசி வாங்கினார்கள் . அந்த வியாபாரி , “ இது உமக்காக இன்னின்ன விலை . அல்லாஹ்வின் மீதாணையாக . மற்றவராக இருந்திருந்தால் இதை நான் ( இன்ன விலைக்குக் ) கொடுத்திருக்க மாட்டேன் ; ( தங்களின் கல்வியின் காரணமாக ) இதை ( எந்தவிதப் பேரமும் பேசாமல் விற்க ) ச் செய்துவிட்டீர்கள் ” என்றார் . ( அதைக் கேட்ட இமாம் அவர்கள் ) அதன்பிறகு அல்லாஹ்வோடு சேர்கின்ற ( மரணம் ) வரை வாங்கவோ விற்கவோ கடைவீதிக்கு வந்ததே இல்லை .

Reference: ( தாரமீ : 592) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 414 அத்தியாயம் 8 பாடம் 41

عَنْ عُبَيْدِ بْنِ الْحَسَنِ قَالَ قَسَمَ مُصْعَبُ بْنُ الزُّبَيْرِ مَالًا فِي قُرَّاءِ أَهْلِ الْكُوفَةِ حِينَ دَخَلَ شَهْرُ رَمَضَانَ فَبَعَثَ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْقِلٍ بِأَلْفَيْ دِرْهَمٍ فَقَالَ لَهُ اسْتَعِنْ بِهَا فِي شَهْرِكَ هَذَا فَرَدَّهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَعْقِلٍ وَقَالَ لَمْ نَقْرَأْ الْقُرْآنَ لِهَذَا . 414

உபைத் பின் ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஸ்அப் பின் அஸ்ஸுபைர் ரஹிமஹுல்லாஹ் , ரமளான் மாதம் தொடங்கும்போது கூஃபாவாழ் காரீகளுக்கு ( குர்ஆன் ஓதுவோர் ) பொருளைக் கொடுப்பதாகச் சத்தியம் செய்தார் . எனவே அவர் அப்துர் ரஹ்மான் பின் மஅகில் என்பாருக்கு ஈராயிரம் திர்ஹம்களை அனுப்பிவைத்து , “ உம்முடைய இந்த மாதத்தில் இதைக்கொண்டு உதவிபெற்றுக்கொள்வீராக ” என்று சொல்லியனுப்பினார் . ( ஆனால் ) அப்துர் ரஹ்மான் பின் மஅகில் , “ இந்த அன்பளிப்புக்காக நாங்கள் குர்ஆன் ஓதுவதில்லை ” என்று கூறி , அதைத் திருப்பி அனுப்பிவிட்டார் .

Reference: ( தாரமீ : 594) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 415 அத்தியாயம் 8 பாடம் 41

عَنْ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ مَنْ أَرْبَابُ الْعِلْمِ قَالَ الَّذِينَ يَعْمَلُونَ بِمَا يَعْلَمُونَ قَالَ فَمَا يَنْفِي الْعِلْمَ مِنْ صُدُورِ الرِّجَالِ قَالَ الطَّمَعُ . 415

உபைதுல்லாஹ் பின் உமர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு , அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களிடம் , “ கல்வியாளர்கள் யார் ?” என்று கேட்டார்கள் . அதற்கு அவர்கள் , “ தாம் அறிந்ததைக்கொண்டு செயல்படுபவர்களே ஆவர் ” என்று கூறினார்கள் . “( கல்விக்கேற்ற செயல்பாடு இல்லையானால் ) ஆண்களின் உள்ளங்களிலிருந்து கல்வியை ( இல்ம் ) இல்லாமல் அழித்துவிடுமா ?” என்று மறுவினாத் தொடுத்தார்கள் . அதற்கு அவர்கள் , “( கல்வியைத் தேட வேண்டுமென்ற ) தேட்டம் ( அழிந்துவிடும் )” என்று விடையளித்தார்கள் .

Reference: ( தாரமீ : 595) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 416 அத்தியாயம் 8 பாடம் 41

عَنْ عَلِيٌّ تَعَلَّمُوا الْعِلْمَ فَإِذَا عَلِمْتُمُوهُ فَاكْظِمُوا عَلَيْهِ وَلَا تَشُوبُوهُ بِضَحِكٍ وَلَا بِلَعِبٍ فَتَمُجَّهُ الْقُلُوبُ . 416

அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள் . அதைக் கற்றுக்கொண்டால் அதனோடு அடக்கமாக இருங்கள் . அதனைச் சிரிப்போடும் விளையாட்டோடும் கலந்துவிடாதீர்கள் . ( அவ்வாறு செய்தால் கற்ற ) அந்த உள்ளம் அதனைத் துப்பிவிடும் .

Reference: ( தாரமீ : 602) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .