42-باب : يكره للعالم أن يمشي الرجال وراءه
பாடம் 42

பாடம்: 42. மார்க்க அறிஞர் தமக்குப் பின்னால் மக்கள் நடந்துவருவதை வெறுத்தல்

ஹதீஸ் 417 அத்தியாயம் 8 பாடம் 42

عَنْ سُلَيْمِ بْنِ حَنْظَلَةَ قَالَ أَتَيْنَا أُبَيَّ بْنَ كَعْبٍ لِنَتَحَدَّثَ إِلَيْهِ فَلَمَّا قَامَ قُمْنَا وَنَحْنُ نَمْشِي خَلْفَهُ فَرَهَقَنَا عُمَرُ فَتَبِعَهُ فَضَرَبَهُ عُمَرُ بِالدِّرَّةِ قَالَ فَاتَّقَاهُ بِذِرَاعَيْهِ فَقَالَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ مَا نَصْنَعُ قَالَ أَوَ مَا تَرَى فِتْنَةً لِلْمَتْبُوعِ مَذَلَّةً لِلتَّابِعِ. 417

சுலைம் பின் ஹன்ழலா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பதற்காக வந்தோம் . ( பேச்சு முடிந்து ) அவர் எழுந்தபோது நாங்களும் எழுந்து , அவருக்குப் பின்னால் நடந்துசென்றோம் . அதைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு , அவரைப் பின்பற்றி வந்து அவரைச் சாட்டையால் அடித்தார்கள் . அவருக்குப் பின்னால் செல்வதை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள் ” என்று கூறினார்கள் . “ அமீருல் முஃமினீன் அவர்களே ! ( அப்படியானால் ) நாங்கள் என்ன செய்ய வேண்டும் ?” என்று வினவினார் . பின்பற்றிச் செல்பவருக்கு அது இழிவு என்றும் , பின்பற்றிச் செல்லப்படுபவருக்கு ஏதாவது குழப்பம் ஏற்படும் என்பதை நீர் கவனிக்க மாட்டீரா ?” என்று கேட்டார்கள் .

Reference: ( தாரமீ : 540) இதன் அறிவிப்பாளர் தொடர் தரமானது .
ஹதீஸ் 418 அத்தியாயம் 8 பாடம் 42

عَنْ إِبْرَاهِيمَ قَالَ : كَانُوا يَكْرَهُونَ أَنْ تُوطَأَ أَعْقَابُهُمْ . 418

இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( அறிஞர்களாகிய ) அவர்கள் தமக்குப் பின்னால் காலடித் தடங்கள் மிதிக்கப்படுவதை ( மனிதர்கள் நடந்துவருவதை ) வெறுப்பவர்களாக இருந்தார்கள் .

Reference: ( தாரமீ : 541) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 419 அத்தியாயம் 8 பாடம் 42

عَنْ سُفْيَانُ عَنْ أُمَيٍّ قَالَ مَشَوْا خَلْفَ عَلِيٍّ فَقَالَ عَنِّي خَفْقَ نِعَالِكُمْ فَإِنَّهَا مُفْسِدَةٌ لِقُلُوبِ نَوْكَى الرِّجَالِ . 419

உமய்யு என்ற இப்னு ரபீஆ அல்முராதீ என்பாரிடமிருந்து சுஃப்யான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னால் ( மக்கள் சிலர் ) நடந்தார்கள் . அப்போது அவர்கள் , “ உங்களுடைய காலணி ஓசையை என்னைவிட்டு விலக்கிக் கொள்ளுங்கள் . ஏனென்றால் இ( வ்வாறு நீங்கள் நடந்துவருவ ) து அறிவிலிகளின் நெஞ்சங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் ” என்று கூறினார்கள் .

Reference: ( தாரமீ : 551)