பாடம்: 2. இரண்டு அட்டைகளுக்கு இடையே
(خ) عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ قَالَ دَخَلْتُ أَنَا وَشَدَّادُ بْنُ مَعْقِلٍ عَلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ لَهُ شَدَّادُ بْنُ مَعْقِلٍ أَتَرَكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ شَيْءٍ قَالَ مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ . 428
அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நானும் ஷத்தாத் பின் மஅகில் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்றோம் . அப்போது இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஷத்தாத் ரஹிமஹுல்லாஹ் , “ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( உலகைப் பிரிந்தபோது , இந்தக் குர்ஆனில் இடம் பெறாத ) வேறு ( இறைவசனங்கள் ) எதையும் ( நம்மிடையே ) விட்டுச் சென்றார்களா ?`` என்று கேட்டார்கள் . இப்னு அப்பாஸ் ரஹிமஹுல்லாஹ் , “( இந்தக் குர்ஆனின் ) இரு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் ( இறை வேதமாக ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச்சென்றார்கள் `` என்று பதிலளித்தார்கள் . நாங்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய புதல்வரான முஹம்மது பின் ஹனஃபிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் சென்று , இது குறித்துக் கேட்டோம் . அதற்கு அவர்கள் “ இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தது போன்றே “( இந்தக் குர்ஆனின் ) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் ( இறை வேதமாக ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விட்டுச் சென்றார்கள் `` என்று பதிலளித்தார்கள் .