5-باب : نسخ القرآن في عهد عشمان
பாடம் 5

பாடம்: 5. உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் குர்ஆனைப் பிரதியெடுத்தல்

ஹதீஸ் 436 அத்தியாயம் 9 பாடம் 5

(خ) عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ: أَنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ إِرْمِينِيَةَ وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ الْعِرَاقِ فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي الْقِرَاءَةِ فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلاَفَ الْيَهُودِ وَالنَّصَارَى فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي الْمَصَاحِفِ ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ الْقُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ أَنْ يُحْرَقَ‏.‏ 436

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஹுதைஃபா பின் யமான் ரளியல்லாஹு அன்ஹு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ( அவர்களது ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு ) வருகை புரிந்தார்கள் . ( அப்போது ) உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு , அர்மீனியா , அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றி கொள்வதற்கான போரில் கலந்து கொள்ளுமாறு சிரியாவாழ் மக்களுக்கு ஆணை பிறப்பித்திருந்தார்கள் . ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை , ( இராக் , சிரியா நாட்டு ) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்து வேறுபாடுகொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது . ஆகவே , ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ யூதர்களும் கிறிஸ்தவர்களும் ( தங்களுடைய வேதங்களில் ) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த ( த் திருக் குர்ஆன் ) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள் , இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே !`` என்று கூறினார்கள் . ஆகவே , உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ( அன்னை ) ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஆளனுப்பி " தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள் ! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டுத் திருப்பித் தந்து விடுகிறோம் `` என்று தெரிவித்தார்கள் . எனவே , ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள் . ஸைத் பின் ஸாபித் , அப்துல்லாஹ் பின் ஸுபைர் , சயீத் பின் ஆஸ் , அப்துர் ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹும் ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு உத்தரவிட்டார்கள் . மேலும் , உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு ( அந்த நால்வரில் ) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி , “ நீங்களும் ( அன்ஸாரியான ) ஸைத் பின் ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு ( எழுத்திலக்கண ) விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டால் குறைஷியரின் ( வட்டார ) மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள் . ஏனெனில் , குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று `` என்று கூறினார்கள் . அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள் . ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடமிருந்த அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள் . பிறகு உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அந்தப் பிரதியை ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள் . பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள் . இதுவல்லாமல் ( புழக்கத்திலிருந்த ) இதர பிரதிகளை , அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு உத்தரவிட்டார்கள் .

Reference: ( புகாரீ : 4987)
ஹதீஸ் 437 அத்தியாயம் 9 பாடம் 5

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَعْرِفُ فَصْلَ السُّورَةِ حَتَّى تَنَزَّلَ عَلَيْهِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ . 437

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் எனும் வசனம் அருளப்படுகின்ற வரை அத்தியாயங்களுக்கு இடையே பிரித்தல் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்திருக்கவில்லை .

Reference: ( அபூதாவூத் : 788) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .