பாடம்: 6. ஏழு (வட்டார) மொழி வழக்கில் குர்ஆன் இறங்குதல்
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ . 438
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஒரேயரு ( வட்டார ) மொழிவழக்குப் படி ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ( குர்ஆனை ) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள் . அதை இன்னும் பல ( வட்டார ) மொழிவழக்குகளின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன் . ( நான் கேட்கக் கேட்க ) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டே வந்து இறுதியில் ஏழு ( வட்டார ) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது .
(ق ) عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِيهَا وَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا فَقَالَ لِي أَرْسِلْهُ ثُمَّ قَالَ لَهُ اقْرَأْ فَقَرَأَ قَالَ هَكَذَا أُنْزِلَتْ ثُمَّ قَالَ لِي اقْرَأْ فَقَرَأْتُ فَقَالَ هَكَذَا أُنْزِلَتْ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مِنْهُ مَا تَيَسَّ . 439
உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஹிஷாம் பின் ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு ( திருக்குர்ஆனின் 25ஆம்) அத்தியாயம் அல்ஃபுர்கானை நான் ஓதுகின்ற முறைக்கு மாற்றமாக ஓதுவதைச் செவியுற்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்கெனவே அந்த அத்தியாயத்தை எனக்கு ஓதிக் காட்டியிருந்தார்கள் . நான் , உடனே ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைக் கண்டிக்க முற்பட்டேன் . பிறகு ( சற்று யோசித்து ) அவர்கள் தொழுகையை முடிக்கும் வரை அவர்களுக்கு அவகாசம் அளித் ( துக் காத்திருந் ) தேன் . ( அவர்கள் தொழுது முடித்த ) பிறகு , அவர்களின் போர்வை ( போன்ற அங்கி ) யை அவர்களுடைய கழுத்தில் போட்டு இழுத்து , அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று , "( நபியவர்களே !) நீங்கள் எனக்கு ஓதிக் கொடுத்ததற்கு மாற்றமாக இவர் ஓதுவதை நான் கேட்டேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவரை விட்டு விடுங்கள் `` என்று கூறினார்கள் . பிறகு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை நோக்கி , “ நீங்கள் ஓதுங்கள் `` என்று கூறினார்கள் . அவர் ஓத , அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இப்படித்தான் ( இந்த அத்தியாயம் ) இறங்கிற்று `` என்று கூறினார்கள் . பிறகு என்னை நோக்கி , “ நீங்கள் ஓதுங்கள் `` என்று கூறினார்கள் . நான் ஓதினேன் . ( அதைக் கேட்ட ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இப்படித்தான் ( இந்த அத்தியாயம் ) இறங்கிற்று . நிச்சயமாக , குர்ஆன் , ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளின்படி இறக்கியருளப்பட்டிருக்கின்றது . ஆகவே , உங்களுக்கு இலேசானதை அதிலிருந்து ஓதிக் கொள்ளுங்கள் `` என்று கூறினார்கள் .
(م) عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ كُنْتُ فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ يُصَلِّي فَقَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ ثُمَّ دَخَلَ آخَرُ فَقَرَأَ قِرَاءَةً سِوَى قَرَاءَةِ صَاحِبِهِ فَلَمَّا قَضَيْنَا الصَّلَاةَ دَخَلْنَا جَمِيعًا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ إِنَّ هَذَا قَرَأَ قِرَاءَةً أَنْكَرْتُهَا عَلَيْهِ وَدَخَلَ آخَرُ فَقَرَأَ سِوَى قِرَاءَةِ صَاحِبِهِ فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَآ فَحَسَّنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَأْنَهُمَا فَسَقَطَ فِي نَفْسِي مِنْ التَّكْذِيبِ وَلَا إِذْ كُنْتُ فِي الْجَاهِلِيَّةِ فَلَمَّا رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ غَشِيَنِي ضَرَبَ فِي صَدْرِي فَفِضْتُ عَرَقًا وَكَأَنَّمَا أَنْظُرُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ فَرَقًا فَقَالَ لِي يَا أُبَيُّ أُرْسِلَ إِلَيَّ أَنْ اقْرَأْ الْقُرْآنَ عَلَى حَرْفٍ فَرَدَدْتُ إِلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي فَرَدَّ إِلَيَّ الثَّانِيَةَ اقْرَأْهُ عَلَى حَرْفَيْنِ فَرَدَدْتُ إِلَيْهِ أَنْ هَوِّنْ عَلَى أُمَّتِي فَرَدَّ إِلَيَّ الثَّالِثَةَ اقْرَأْهُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَلَكَ بِكُلِّ رَدَّةٍ رَدَدْتُكَهَا مَسْأَلَةٌ تَسْأَلُنِيهَا فَقُلْتُ اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي اللَّهُمَّ اغْفِرْ لِأُمَّتِي وَأَخَّرْتُ الثَّالِثَةَ لِيَوْمٍ يَرْغَبُ إِلَيَّ الْخَلْقُ كُلُّهُمْ حَتَّى إِبْرَاهِيمُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ . 440
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன் . அப்போது ஒரு மனிதர் ( பள்ளிவாசலுக்குள் ) வந்து தொழலானார் ; ( தொழுகையில் குர்ஆன் வசனங்களை ) ஒரு விதமாக ஓதினார் . அதை நான் அறிந்திருக்கவில்லை . பிறகு மற்றொருவர் வந்து ( அதே வசனங்களை ) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார் . தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றோம் . நான் " இவர் குர்ஆனை நான் அறிந்திராத ( ஓதல் ) முறையில் ஓதினார் . பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக ( அதையே ) வேறு முறையில் ஓதினார் `` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள் . அவ்விருவரும் ஓதினர் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள் . ( இதைக் கேட்டவுடன் ) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது . அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை . என்னை ஆட்கொண்டிருந்த ( அந்த எண்ணத் ) தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள் . ( அடி விழுந்ததும் ) எனக்கு வியர்த்துக் கொட்டியது . அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் " உபை , குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக ` என எனக்கு ( இறைவனிடமிருந்து ) செய்தி அறிவிக்கப்பட்டது . உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் எளிதாக்கும்படி ( இறைவனிடம் ) கோரினேன் . அப்போது " குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக !` என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான் . உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு எளிதாக்கும்படி கோரினேன் . மூன்றாவது முறை குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின்படி ஓதுமாறு எனக்கு இறைவன் அறிவித்தான் . மேலும் , " நீர் கோரிய ( மூன்று கோரிக்கைகளில் ) ஒவ்வொரு கோரிக்கைக்கும் பகரமாக என்னிடம் உமக்கு ஓர் ( அங்கீகரிக்கப்பட்ட ) பிரார்த்தனை உண்டு ` என்றும் ( இறைவன் ) கூறினான் . எனவே நான் ‘ இறைவா ! என் சமுதாயத்தாரை மன்னிப்பாயாக ! இறைவா ! என் சமுதாயத்தாரின் குற்றங்குறைகளை மறைப்பாயாக !` என ( இரண்டு ) பிரார்த்தனை செய்தேன் . ( இவ்விரு பிரார்த்தனைகள் அல்லாமல் ) மூன்றாவது பிரார்த்தனையை நான் ஒரு நாளைக்காகத் தாமதப்படுத்தி ( பத்திரப்படுத்தி ) வைத்துள்ளேன் . அந்நாளில் படைப்பினங்கள் அனைத்தும் என்னிடம் ( பரிந்துரைக்கும்படி ) ஆவலுடன் வருவார்கள் ; இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் உட்பட `` எனக் கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ فَقَالَ يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ مِنْهُمْ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلَامُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ قَالَ يَا مُحَمَّدُ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ . 441
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( வானவத் தூதர் ) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தபோது , " ஷிப்ரீலே ! நான் எழுத்தறிவற்ற சமுதாயத்தாருக்கு ( த் தூதராக ) அனுப்பப்பட்டுள்ளேன் . அவர்களில் இயலாதவர்களும் , முதிய வயதுடையவர்களும் , சிறுவர் சிறுமியரும் , எந்த ஒரு நூலையும் அறவே வாசிக்கத் தெரியாதவர்களும் உள்ளனர் ( இவர்களெல்லாம் எந்த முறையில் குர்ஆனை ஓதுவர் ?)" என்று கூறினார்கள் . அதற்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் , " இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளட்டும் )" என்று கூறினார்கள் .
أَبُو جُهَيْمٍ أَنَّ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ مِنْ الْقُرْآنِ فَقَالَ هَذَا تَلَقَّيْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ الْآخَرُ تَلَقَّيْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ الْقُرْآنُ يُقْرَأُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَلَا يُمَارُوا فِي الْقُرْآنِ فَإِنَّ مِرَاءً فِي الْقُرْآنِ كُفْرٌ . 442
அபூஜுஹைம் பின் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : திருக்குர்ஆனின் ஒரு வசனத்தில் இருவர் கருத்துவேறுபாடு கொண்டார்கள் . ( அவர்களுள் ) ஒருவர் , “ நான் இதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்றேன் ” என்றார் . ( அவ்விருவருள் ) மற்றவர் , “ நான் இதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்றேன் ” என்றார் . எனவே அவ்விருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று ( விஷயத்தைச் சொல்லி விளக்கம் ) கேட்டார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளுங்கள் ); குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்யாதீர்கள் . குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்வது இறைமறுப்பாகும் " என்று கூறினார்கள் .
عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا قَالَ قَرَأْتُ آيَةً وَقَرَأَ ابْنُ مَسْعُودٍ خِلَافَهَا فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ أَلَمْ تُقْرِئْنِي آيَةَ كَذَا وَكَذَا قَالَ بَلَى فَقَالَ ابْنُ مَسْعُودٍ أَلَمْ تُقْرِئْنِيهَا كَذَا وَكَذَا فَقَالَ بَلَى كِلَاكُمَا مُحْسِنٌ مُجْمِلٌ قَالَ فَقُلْتُ لَهُ فَضَرَبَ صَدْرِي فَقَالَ يَا أُبَيُّ بْنَ كَعْبٍ إِنِّي أُقْرِئْتُ الْقُرْآنَ فَقِيلَ لِي عَلَى حَرْفٍ أَوْ عَلَى حَرْفَيْنِ قَالَ فَقَالَ الْمَلَكُ الَّذِي مَعِي عَلَى حَرْفَيْنِ فَقُلْتُ عَلَى حَرْفَيْنِ فَقَالَ عَلَى حَرْفَيْنِ أَوْ ثَلَاثَةٍ فَقَالَ الْمَلَكُ الَّذِي مَعِي عَلَى ثَلَاثَةٍ فَقُلْتُ عَلَى ثَلَاثَةٍ حَتَّى بَلَغَ سَبْعَةَ أَحْرُفٍ لَيْسَ مِنْهَا إِلَّا شَافٍ كَافٍ إِنْ قُلْتَ غَفُورًا رَحِيمًا أَوْ قُلْتَ سَمِيعًا عَلِيمًا أَوْ عَلِيمًا سَمِيعًا فَاللَّهُ كَذَلِكَ مَا لَمْ تَخْتِمْ آيَةَ عَذَابٍ بِرَحْمَةٍ أَوْ آيَةَ رَحْمَةٍ بِعَذَابٍ . 443
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:நான் ( குர்ஆனிலிருந்து ) ஒரு வசனத்தை ஓதினேன் . இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அதற்கு மாற்றமாக ( அந்த வசனத்தை ) ஓதினார் . எனவே நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ இந்த வசனத்தை இன்னின்னவாறு நீங்கள் என்னிடம் ஓதவில்லையா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஆம் !” என்றார்கள் . இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு “ இந்த வசனத்தை இன்னின்னவாறு நீங்கள் என்னிடம் ஓதவில்லையா ?” என்று கேட்டார்கள் . அதற்கு அவர்கள் , “ ஆம் ! நீங்கள் இருவரும் சரியாகவும் அழகாகவும் ஓதியுள்ளீர்கள் ” என்றார்கள் . பிறகு நான் அவர்களிடம் ( என் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தைக் ) கூறினேன் . எனவே அவர்கள் என் நெஞ்சத்தின்மீது ( ஓர் அடி ) அடித்தார்கள் . பின்பு அவர்கள் , “ உபை பின் கஅபே ! நிச்சயமாக என்னிடம் குர்ஆன் ஓதிக்காட்டப்பட்டது . அப்போது என்னிடம் , ஓர் ஓதல் முறையா , இரண்டு ஓதல் முறையா ?” என்று கேட்கப்பட்டது . என்னுடன் இருந்த வானவர் , “ இரண்டு ஓதல் முறை ” என்று கூறினார் . எனவே நான் , “ இரண்டு ஓதல் முறை ” என்று கூறினேன் . பிறகு “ இரண்டு ஓதல் முறையா , மூன்று ஓதல் முறையா ?” என்று கேட்டார் . என்னுடன் இருந்த வானவர் , “ மூன்று ஓதல் முறை ” என்று கூறினார் . எனவே நான் , “ மூன்று ஓதல் முறை ” என்று கூறினேன் . இவ்வாறே ( கேள்வியும் பதிலும் தொடர்ந்து ) ஏழு ஓதல் முறைகள் வரை அடைந்தது . அவற்றில் தெளிவான போதுமான ஓதல் முறைகள் இல்லாமலில்லை . ஃகஃபூரர் ரஹீமா ( மன்னிக்கக்கூடியவன் , அன்பாளன் ) என்று நீ சொன்னாலும் அல்லது சமீஅன் அலீமா ( செவியுறுபவன் , நன்கறிந்தவன் ) என்றோ அலீமன் சமீஆ ( நன்கறிந்தவன் , செவியுறுபவன் ) என்றோ நீ சொன்னாலும் அல்லாஹ் அவ்வாறே உள்ளான் . வேதனை குறித்துப் பேசுகின்ற வசனத்தில் நீ ரஹ்மத் எனும் அருளைக்கொண்டு முடிக்கக் கூடாது . ரஹ்மத் குறித்துப் பேசுகின்ற வசனத்தில் அதாப் எனும் வேதனையைக்கொண்டு முடிக்கக் கூடாது என்று கூறினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : أُنْزِلَ الْقُرْآنُ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ ، وَالْمِرَاءُ فِي الْقُرْآنِ كُفْرٌ ثَلَاثًا ، مَا عَرَفْتُمْ مِنْهُ فَاعْمَلُوا بِهِ ، وَمَا جَهِلْتُمْ مِنْهُ فَرُدُّوهُ إِلَى عَالِمِهِ . 444
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இந்தக் குர்ஆன் ( ஓதுவதற்கான ) ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கின்றது ( அவற்றில் எளிதானதை அவர்கள் ஓதிக்கொள்ளுங்கள் ); குர்ஆனில் ( சந்தேகம் கொண்டு ) தர்க்கம் செய்வது இறைமறுப்பாகும் என்று - மும்முறை - கூறினார்கள் . அதில் நீங்கள் அறிந்ததைச் செயல்படுத்துங்கள் . அதில் நீங்கள் அறியாததை அறிந்தவரிடம் ( அவரது கவனத்திற்குத் ) திருப்புங்கள் .