7-باب : ترتيب السور
பாடம் 7

பாடம்: 7. (குர்ஆன்) அத்தியாயங்களை ஒழுங்கமைத்தல்

ஹதீஸ் 445 அத்தியாயம் 9 பாடம் 7

(خ ) يُوسُفُ بْنُ مَاهَكٍ قَالَ إِنِّي عِنْدَ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا إِذْ جَاءَهَا عِرَاقِيٌّ فَقَالَ أَيُّ الْكَفَنِ خَيْرٌ قَالَتْ وَيْحَكَ وَمَا يَضُرُّكَ قَالَ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَرِينِي مُصْحَفَكِ قَالَتْ لِمَ قَالَ لَعَلِّي أُوَلِّفُ الْقُرْآنَ عَلَيْهِ فَإِنَّهُ يُقْرَأُ غَيْرَ مُؤَلَّفٍ قَالَتْ وَمَا يَضُرُّكَ أَيَّهُ قَرَأْتَ قَبْلُ إِنَّمَا نَزَلَ أَوَّلَ مَا نَزَلَ مِنْهُ سُورَةٌ مِنْ الْمُفَصَّلِ فِيهَا ذِكْرُ الْجَنَّةِ وَالنَّارِ حَتَّى إِذَا ثَابَ النَّاسُ إِلَى الْإِسْلَامِ نَزَلَ الْحَلَالُ وَالْحَرَامُ وَلَوْ نَزَلَ أَوَّلَ شَيْءٍ لَا تَشْرَبُوا الْخَمْرَ لَقَالُوا لَا نَدَعُ الْخَمْرَ أَبَدًا وَلَوْ نَزَلَ لَا تَزْنُوا لَقَالُوا لَا نَدَعُ الزِّنَا أَبَدًا لَقَدْ نَزَلَ بِمَكَّةَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ بَلْ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ وَمَا نَزَلَتْ سُورَةُ الْبَقَرَةِ وَالنِّسَاءِ إِلَّا وَأَنَا عِنْدَهُ قَالَ فَأَخْرَجَتْ لَهُ الْمُصْحَفَ فَأَمْلَتْ عَلَيْهِ آيَ السُّوَرِ . 445

யூசுப் பின் மாஹக் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் இருந்து கொண்டிருந்தேன் . அப்போது இராக் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வந்து , “( இறந்தவருக்கு அணிவிக்கப்படும் ) " கஃபன் ` துணியில் சிறந்தது எது ? ( வெள்ளை நிறமா ? மற்ற நிறமா ?)`` என்று கேட்டார் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “ அடப்பாவமே ! ( நீங்கள் இறந்ததற்குப் பின்னால் எந்தக் கஃபன் துணியால் அடக்கம் செய்யப்பட்டாலும் ) உங்களுக்கு என்ன கஷ்டம் வந்துவிடப்போகிறது ?`` என்று கேட்டார்கள் . அதற்கவர் , “ இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே ! தங்களிடமுள்ள குர்ஆன் பிரதியை எனக்குக் காட்டுங்கள் ?`` என்று கூறினார் . ( அன்னை ) அவர்கள் , “ ஏன் ?`` என்று கேட்டார்கள் . அதற்கவர் , " அதனை ( முன்மாதிரியாக ) க்கொண்டு நான் குர்ஆனை ( வரிசைக்கிரமமாக ) த் தொகுக்க வேண்டும் . ஏனெனில் , ( தற்சமயம் ) வரிசைப்படி தொகுக்கப்படாமல் தான் குர்ஆன் ஓதப்பட்டு வருகிறது `` என்று சொன்னார் . ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா , “( வரிசைப்படுத்தப்படாமல் உள்ள குர்ஆன் அத்தியாயங்களில் ) எதை நீங்கள் முதலில் ஓதினால் ( என்ன ? எதை அடுத்து ஓதினால் ) என்ன கஷ்டம் ( ஏற்பட்டு விடப்போகிறது )?`` என்று கேட்டார்கள் . " முஃபஸ்ஸல் ` ( எனும் ஓரளவு சிறிய ) அத்தியாயங்களில் உள்ள ஒன்றுதான் முதன் முதலில் அருளப்பட்டது ; அதில் சொர்க்கம் நரகம் பற்றிக் கூறப்பட்டது . அடுத்து மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி ( அதன் நம்பிக்கைகள் மீது திருப்தியடையத் தொடங்கி ) யபோது ஹலால் ( அனுமதிக்கப்பட்டவை ) ஹராம் ( விலக்கப்பட்டவை ) குறித்த வசனங்கள் அருளப்பட்டன . எடுத்த எடுப்பிலேயே “ நீங்கள் மது அருந்தாதீர்கள் `` என்று வசனம் அருளப்பட்டிருந்தால் அவர்கள் , “ நாங்கள் ஒருபோதும் மதுவைக் கைவிடமாட்டோம் `` என்று கூறியிருப்பார்கள் . அல்லது , “ விபச்சாரம் செய்யாதீர்கள் `` என்று ( முதன் முதலில் ) வசனம் அருளப்பட்டிருக்குமானால் , நிச்சயம் அவர்கள் , “ நாங்கள் ஒருபோதும் விபச்சாரத்தைக் கைவிடமாட்டோம் `` என்று கூறியிருப்பார்கள் . ( ஆகவேதான் அல்லாஹ் , படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் வசனங்களை அருளினான் .) நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோதுதான் மக்காவில் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “( இவர்களின் கணக்கைத் தீர்ப்பதற்காக உண்மையில் ) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும் . மேலும் , அந்த நேரம் மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதும் , கசப்பானதுமாகும் `` எனும் (54:46ஆம்) வசனம் அருளப்பட்டது . ( சட்டங்கள் சம்பந்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ள ) அல்பகரா (2ஆம்) அத்தியாயமும் , அந்நிஸா (4ஆம்) அத்தியாயமும் நான் ( மதீனாவில் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ( அவர்களுடைய மனைவியாக ) இருந்தபோதுதான் இறங்கின என்று கூறிவிட்டு , ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா தம்மிடமிருந்த அந்தக் குர்ஆன் பிரதியை ( இராக் நாட்டவரான ) அந்த மனிதருக்காகக் கொண்டுவந்து அவருக்காக ஒவ்வோர் அத்தியாயத்தின் வசனங்களையும் எழுதச் செய்தார்கள் .

Reference: ( புகாரீ : 4993)