9-باب :العرضة الأخيرة
பாடம் 9

பாடம்: 9. (குர்ஆனை) கடைசியாக ஓதிக்காட்டுதல்

ஹதீஸ் 449 அத்தியாயம் 9 பாடம் 9

(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كَانَ يَعْرِضُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقُرْآنَ كُلَّ عَامٍ مَرَّةً فَعَرَضَ عَلَيْهِ مَرَّتَيْنِ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ وَكَانَ يَعْتَكِفُ كُلَّ عَامٍ عَشْرًا فَاعْتَكَفَ عِشْرِينَ فِي الْعَام الَّذِي قُبِضَ فِيهِ . 449

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை ( வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்துபோன ஆண்டில் இரண்டு முறை அவர்களுக்கு ( ஜிப்ரீல் ) ஓதிக் காட்டினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வோர் ஆண்டும் ( ரமளான் மாதத்தின் இறுதிப் ) பத்து நாட்கள் " இஃதிகாஃப் ` மேற்கொள்வது வழக்கம் . அவர்கள் இறந்த ஆண்டு , ( ரமளானில் ) இருபது நாட்கள் " இஃதிகாஃப் ` மேற்கொண்டார்கள் .

Reference: ( புகாரீ : 4998)
ஹதீஸ் 450 அத்தியாயம் 9 பாடம் 9

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ أَيُّ الْقِرَاءَتَيْنِ كَانَتْ أَخِيرًا قِرَاءَةُ عَبْدِ اللَّهِ أَوْ قِرَاءَةُ زَيْدٍ ؟ قَالَ: قُلْنَا قِرَاءَةُ زَيْدٍ قَالَ : لَا إِلَّا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَعْرِضُ الْقُرْآنَ عَلَى جَبْرَائِيلَ كُلَّ عَامٍ مَرَّةً فَلَمَّا كَانَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ عَرَضَهُ عَلَيْهِ مَرَّتَيْنِ وَكَانَتْ آخِرَ الْقِرَاءَةِ قِرَاءَةُ عَبْدِ اللَّهِ . 450

முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ இரண்டு ஓதல்களில் எது கடைசியாக இருந்தது ? அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் ஓதலா ? ஸைத் பின் ஸாபித் அவர்களின் ஓதலா ?” என்று கேட்டார்கள் . “ ஸைத் பின் ஸாபித் அவர்களின் ஓதல்தான் ” என்று நாங்கள் கூறினோம் . அதற்கு அவர்கள் , “ இல்லை . மாறாக , ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை வானவர் ஜிப்ரீல் அவர்களிடம் ( அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்துபோன ஆண்டில் இரண்டு முறை அவர்கள் அவரிடம் ( ஜிப்ரீலிடம் ) ஓதிக் காட்டினார்கள் . மேலும் ஓதலில் கடைசியானது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களின் ஓதல்தான் ” என்று கூறினார்கள் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 2494) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 451 அத்தியாயம் 9 பாடம் 9

عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - عَرَضَاتٍ فَيَقُولُونَ : إِنَّ قِرَاءَتَنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ. 451

சமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : குர்ஆன் வசனங்கள் பல தடவை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ( மொத்தமாக ) ஓதிக் காட்டப்பட்டது . எனவே மக்களாகிய அவர்கள் , ( முன்னிலையில் ஓதிக்காட்டப்படும்போது ) நிச்சயமாக நம்முடைய இந்த ஓதல் முறைதான் ( நபியவர்களுக்குக் ) கடைசியாக ஓதிக்காட்டப்பட்டது என்று கூறுவார்கள் .

Reference: ( ஹாகிம் : 2904) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் .
ஹதீஸ் 452 அத்தியாயம் 9 பாடம் 9

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ : كَانَ جِبْرِيلُ يَعْرِضُ الْقُرْآنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّ عَامٍ مَرَّةً فِي رَمَضَانَ ، فَلَمَّا كَانَ الْعَامُ الَّذِي قُبِضَ فِيهِ عَرَضَهُ مَرَّتَيْنِ . 452

அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒவ்வோர் ஆண்டும் ரமளானில் ஒரு முறை ( அதுவரை அருளப்பெற்ற ) குர்ஆன் வசனங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வானவர் ஜிப்ரீல் ( மொத்தமாக ) ஓதிக் காட்டுவது வழக்கம் . நபியவர்களின் உயிர் கைப்பற்றப்பட்ட ஆண்டில் அதை இரண்டு முறை ஓதிக்காட்டினார் .

Reference: ( அல்அஹாதீஸுல் முக்தாரா : 7/2593) இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .