பாடம்: 10. குர்ஆனில் (வசனங்கள்) மாற்றப்பட்ட நிகழ்வு
(خ) عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ أَقْرَؤُنَا أُبَيٌّ وَأَقْضَانَا عَلِيٌّ وَإِنَّا لَنَدَعُ مِنْ قَوْلِ أُبَيٍّ وَذَاكَ أَنَّ أُبَيًّا يَقُولُ لَا أَدَعُ شَيْئًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا . 453
உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எங்களுள் ( குர்ஆனை ) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு ஆவார் . எங்களுள் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆவார் . நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் . ஏனெனில் அவர் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன் `` என்று சொல்வார் . ஆனால் , அல்லாஹ்வோ , “ எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால் , அல்லது அகற்றிவிட்டால் ( அதற்குப் பதிலாக ) அதனினும் சிறந்த , அல்லது அதைப் போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம் `` (2: 106) என்று கூறியுள்ளான் .
عَنْ زِرٍّ قَالَ قَالَ لِي أُبَيُّ بْنُ كَعْبٍ كَأَيِّنْ تَقْرَأُ سُورَةَ الْأَحْزَابِ أَوْ كَأَيِّنْ تَعُدُّهَا قَالَ قُلْتُ لَهُ ثَلَاثًا وَسَبْعِينَ آيَةً فَقَالَ قَطُّ لَقَدْ رَأَيْتُهَا وَإِنَّهَا لَتُعَادِلُ سُورَةَ الْبَقَرَةِ وَلَقَدْ قَرَأْنَا فِيهَا الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ نَكَالًا مِنْ اللَّهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ . 454
ஸிர்ரு ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் , “ நீர் அல்அஹ்ஸாப் அத்தியாயத்தை ஓதுவதைப்போல் தெரிகிறதே ? அல்லது அதை எண்ணுவதைப் போல் தெரிகிறதே ? என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “( ஆம் ! அதில் ) எழுபத்து மூன்று வசனங்கள் உள்ளன ” என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , நிச்சயமாக ! நான் அதைப் பார்த்திருக்கிறேன் . திண்ணமாக அது அல்பகரா அத்தியாயத்திற்குச் சமமானது . அதில் நாங்கள் ( இவ்வாறு ) படித்திருக்கிறோம் : முதியவரும் மூதாட்டியும் விபச்சாரம் செய்துவிட்டால் கண்டிப்பாக அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவ்விருவரையும் ( மரணம் வரை ) கல்லால் அடியுங்கள் . அல்லாஹ் நன்கறிந்தோனும் நுட்பமானவனும் ஆவான் .